| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 441 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 9 | நம்பனே நவின் றேத்த வல்லார்கள் நாதனே நரசிங்கமதானாய் உம்பர் கோனுலகேழும் அளந்தாய் ஊழி யாயினாய் ஆழி முன்னேந்தி கம்ப மா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே எம்பிரான் என்னை யாளுடைத் தேனே ஏழை யேனிடரைக் களையாயே–5-1-9 | நம்பனே,Nampanae - (ரக்ஷகன் என்று) நம்பத் தகுந்தவனே! நவின்று ஏத்த வல்லார்கள் நாதனே,Navinru Eaetha Vallaargal Naadhanae - (ஸ்தோத்திரங்களை) வாயாரச் சொல்லிப் புகழ வல்லவர்களுக்கு ரக்ஷகனே! நரசிங்கம் அது ஆனாய்,Narasingham Adhu Aanaai - நரசிங்க அவதராம் செய்தருளினவனே! உம்பர்,Umbar - நித்ய ஸூரிகளுக்கு கோன்,Kon - தலைவனே! உலகு ஏழும்,Ulagu Eaazhum - எல்லா வுலகங்களையும் அளந்தாய்,Alandhaai - (திரிவிக்கிரமாவதாரத்தில்) அளந்து கொண்டவனே! ஊழி ஆயினாய்,Oozhi Aayinaai - காலம் முதலிய பதார்த்தங்களுக்கெல்லாம் நிர்வாஹகனானவனே! முன்,Mun - முன்னே ஆழி,Aazhi - திருவாழி யாழ்வானை ஏத்தி,Eaethi - (திருக் கையில்) ஏந்திக் கொண்டு (எழுந்தருளி) மா கம்பம்,Maa Kampam - மிக்க நடுக்கத்தை அடைந்த கரி,Kari - கஜேந்திர ஆழ்வானுடைய கோள்,Kol - சிறையை விடுத்தானே,Viduththaanae - விடுத்தருளினவனே! காரணா,Kaaranaa - ஜகத் காரண பூதனே! கடலை,Kadalai - (திருப்பாற்) கடலை கடைந்தானே,Kadaindhaanae - (தேவர் களுக்காகக்) கடைந்தருளினவனே! எம்பிரான்,Empiraan - எம்பிரானே! என்னை,Ennai - அடியேனை ஆளுடை,Aaludai - ஆட்படுத்திக் கொண்டவனும் தேனே,Thaenae - தேன் போல் இனியனுமானவனே! ஏழையேன்,Eaazhaiyaen - (உன் திருநாமங்களில்) சாபல்யமுடைய என்னுடைய இடரை,Idarai - துன்பத்தை களையாய்,Kalaiyaai - களைந்தருள வேணும். |