| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 442 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || ஐந்தாம் பத்து (முதல் திருமொழி - வாக்குத்தூய்மை) (நைச்சியானுஸந்தானம்) (எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம்) 10 | காமர் தாதை கருதலர் சிங்கம் காண வினிய கருங்குழல் குட்டன் வாமனன் என் மரகத வண்ணன் மாதவன் மது சூதனன் தன்னை சேம நன்கமரும் புதுவையர் கோன் விட்டு சித்தன் வியந் தமிழ் பத்தும் நாம மென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே–5-1-10 | காமர் தாதை,Kaamar Thaathai - மன்மதனுக்குத் தந்தையும் கருதலர் சிங்கம்,Karuththalar Singam - (தன்னை) விரோதிப்பவராகிய யானைகட்கு சிங்கம் போன்றவனும் காண,Kaana - ஸேவிப்பதற்கு இனிய,Iniya - அழகாயிருக்கிற கரு குழல் குட்டன்,Karu Kuzhal Kuttan - கறுத்த குழலையுடைய சிறுக்கனானவனும் வாமனன்,Vaamanan - வாமாநாவதாரம் செய்தருளியவனும் என்,En - எனக்குத் தலைவனும் மரகத வண்ணன்,Maragatha Vannan - மரகதப் பச்சை போன்ற வடியையுடையவனும் மாதவன்,Maadhavan - பிராட்டிக்குக் கண்வனும் மதுசூதனன் தன்னை,Madhusoodanan Thannai - மதுவைக் கொன்றவனுமான எம்பெருமானைக் குறித்தருளிச்செய்த சேமம்,Saemam - க்ஷேமமானது நன்கு,Nangu - நன்றாக (குறைவின்றி) அமரும்,Amarum - அமைந்திருக்கப் பெற்ற புதுவையர் கோன்,Puduvaiyar Kon - ஸ்ரீவில்லிபுத்தூரிள்ளார்க்குத் தலைவனான விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வாரது வியன் தமிழ் பத்தும்,Viyan Tamil Paththum - பெருமையுள்ள (இத்) தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் நாமம் என்று,Naamam Endru - (எம்பெருமானது) திருநாமங்களாக பிரதிபத்தி பண்ணி நவின்று,Navinru - அன்பு கொண்டு உரைப்பார்கள்,Uraippaargal - ஓதுமவவர்கள் ஒல்லை,Ollai - விரைவாக நாரணன் உலகு,Naaranan Ulagu - ஸ்ரீவைகுண்டத்தை நண்ணுவார்,Nannuvaar - கிட்டப் பெறுவர்கள். |