| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 443 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1 | நெய்க் குடத்தைப் பற்றி ஏறும் எறும்புகள் போல் நிரந்து எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் காலம் பெற உய்யப் போமின் மெய்க் கொண்டு வந்து புகுந்து வேதப் பிரானார் கிடந்தார் பைக் கொண்ட பாம்பணை யோடும் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-1 | நெய்க் குடத்தை,Neik Kudaththai - நெய் வைத்திருக்கும் குடத்தை பற்றி,Patri - பற்றிக் கொண்டு ஏறும்,Erum - (அக் குடத்தின் மேல்) ஏறுகின்ற எறும்புகள் போல்,Erumbugal Pol - எறும்புகளைப் போல் நிரந்து எங்கும்,Niranthu Engum - என்னுடைய உடம்பு முழுவதும் பரவி கைக் கொண்டு,Kaik Kondu - (என்னை) வசப்படுத்தி நிற்கின்ற ,Nirkkinra - (என்னையே இருப்பிடமாகக் கொண்டு) நிலைத்து நிற்கிற நோய்காள்,Noigal - வியாதிகளே! காலம்பெற,Kaalampera - விரைவாக உய்ய,Uyya - (நீங்கள்) பிழைக்க வேண்டி போமின்,Pomin - (என்னை விட்டு வேறிடத்தைத் தேடிப்) போய் விடுங்கள் வேதம் பிரானார்,Vedham Piraanaar - (பிரமனுக்கு) வேதத்தை உபகரித்தருளின் எம்பெருமான். பைக் கொண்ட,Paik Konda - பரம்பினை படங்களை யுடைய பாம்பு அணையோடும்,Paambu Anaiyodum - திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடுங்கூட வந்து புகுந்து ,Vandhu Pugundhu - எழுந்தருளி மெய்,Mei - (எனது) சரீரத்தை கொண்டு,Kondu - (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி கிடந்தார்,Kidandhaar - (என் சரீரத்தை கொண்டு (தனக்கு இனிதாகத்) திருவுள்ளம் பற்றி (என் சரீரத்தினுள்ளே) பள்ளி கொண்டிரா நின்றார், ஆதலால் பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |