| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 444 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2 | சித்திர குத்த னெழுத்தால் தென் புலக்கோன் பொறி யொற்றி வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி யொளித்தார் முத்துத் திரைக்கடற் சேர்ப்பன் மூதறி வாளர் முதல்வன் பத்தர்க் கமுதன் அடியேன் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-2 | சித்திர குத்தன்,Siththira Kuththan - சித்ரகுப்தனென்கிற (யமலோகத்துக்) கணக்குப் பிள்ளையானவன் தென் புலம் கோன்,Then Pulam Kon - தெற்குத் திசைக்குத் தலைவனான யமனுடைய பொறி ஒற்றி,Pori Oththri - மேலெழுத்தை இடுவித்து எழுத்தால் வைத்த,Ezuththaal Vaiththa - (தான்) எழுதிவைத்த இலச்சினை,Ilachchinai - குறிப்புச் சீட்டை தூதுவர்,Thoodhuvar - யம கிங்கரர்கள் மாற்றி,Maatri - கிழித்துப் போட்டு விட்டு ஓடி ஒளிந்தார்,Odi Olindhaar - கண்ணுக்குத் தெரியாத இடந்தேடி) ஓடி ஒளிந்துக் கொண்டார்கள்; முத்து,Muththu - முத்துக்களை (க்கொண்டு வீசுகிற) திரை,Thirai - அலைகளை யுடைய கடல்,Kadal - கடலில் சேர்ப்பன,Saerppana - கண் வளர்ந்தருளுமவனும், மூது அறிவு ஆளர்,Moothu Arivu Aalar - முதிர்ந்த அறிவை யுடைய நித்ய ஸூரிகளுக்கு முதல்வன்,Mudhalvan - தலைவனும், பத்தர்க்கு,Paththarkku - அடியார்களுக்கு அமுதன்,Amudhan - அம்ருதம் போல் இனியனுமான எம்பெருமானுக்கு அடியேன்,Adiyaen - (யான்) தாஸனாயினேன்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |