| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 446 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4 | மங்கிய வல்வினை நோய்காள் உமக்கும் ஓர் வல்வினை கண்டீர் இங்குப் புகேன்மின் புகேன்மின் எளிதன்று கண்டீர் புகேன்மின் சிங்கப் பிரானவன் எம்மான் சேரும் திருக் கோயில் கண்டீர் பங்கப் படாது உய்யப் போமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-4 | மங்கிய,Mangiya - (ஆத்துமா உருத் தெரியாதபடி) மழுங்கிக் கிடப்பதற்கு காரணமான வல் வினை,Val Vinai - வலிய பாவங்களின் மூலமாக வளர்ந்த நோய்காள்,Noigal - வியாதிகளே உமக்கும்,Umakkum - உங்களுக்கும் கூட ஓர் வல் வினை,Or Val Vinai - ஒரு கடினமான தீமை நேர்ந்தபடியே) கண்டீர்,Kandir - (இன்று) பாருஙக்ள் இங்கு,Ingku - இவ்விடத்தும் புகேன்மின் புகேன் மின்,Pugenmin Pugen Min - வர வேண்டா, வர வேண்டா எளிது அன்று ,Elidhu Andru - (இனி நீங்கள் என்னைக் கிட்டுகை) சுலபமான கரியமன்று; புகேன்மின்,Pugenmin - ஆகையால் இனி இங்கு வர வேண்டா சிங்கப் பிரானவன்,Singap Piraanavan - நரசிம்மாவதாரமெடுத்து உபசரித்தருளினவன எம்மான் அவன்,Emmaaan Avan - (என் ஆத்துமா) எமக்குத் தலைவனுமான எம்பெருமான் சேரும்,Saerum - எழுந்தருளி யிருப்பதற்கிடமான திரு கோவில் கண்டீர்,Thiru Kovil Kandir - திருக் கோயிலாக அமைந்த படியைப் பாருங்கள் பங்கப்படாத,Pangkap Padaadha - பரிபவப் படாமல் உய்யபோமின்,Uyya Pomin - பிழைத்துப் போங்கள். பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |