Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 447 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
447ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 5
மாணிக் குறளுருவாய மாயனை என் மனத் துள்ளே
பேணிக் கொணர்ந்து புகுத வைத்துக் கொண்டேன் பிறிதின்றி
மாணிக்கப் பண்டாரம் கண்டீர் வலி வன் குறும்பர்களுள்ளீர்
பாணிக்க வேண்டா நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-5
மாணி,Maani - பிரமசாரி வேஷத்தை யுடைய
குறள் உரு,Kural Uru - வாமனாய் அவதரித்தவனும்
மாணிக்கப் பண்டாரம்,Maanikkap Pandaaram - மாணிக்க நிதி போல் இனியவனும்
மாயனை,Maayanai - ஆச்சரிய பூதனுமான எம்பெருமானை
பேணி,Paeni - ஆசைப் பட்டு
கொணர்ந்து,Konarndhu - எழுந்தருளப் பண்ணிக் கொண்டு வந்து
என் மனத்துள்ளே,En Manaththullae - என் நெஞ்சினுள்ளே
புகுத,Pugudha - புகுந்திருக்கும்படி
பிறிது இன்றி,Piridhu Inri - வேற்றுமை யில்லாமல்
வைத்துக் கொண்டேன்,Vaiththuk Konden - அமைத்துக் கொண்டேன்.
வலி வல் குறும்பர்கள் உள்ளீர்,Vali Val Kurumpargal Ullir - மிகவும் கொடிய குறும்புகளைச் செய்கிற இந்திரியங்களே!
நடமின்,Nadamin - (வேறிடந்தேடி) ஓடுங்கள்;
பாணிக்க வேண்டா,Paanikka Vaendaa - தாமதிக்க வேண்டியதில்லை,
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.