Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 448 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
448ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 6
உற்ற வுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின்
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக் கோயில் கண்டீர்
அற்ற முரைக்கின்றேன் இன்னம் ஆழ் வினைகாள் உமக்கு இங்கு ஓர்
பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-6
உற்ற,Utrra - நெடு நாளாக இருக்கிற
உறு பிணி,Uru Pini - மிக்க வருத்தத்தைச் செய்கிற
நோய்காள்,Noigal - நோய்களே!
உமக்கு,Umakku - உங்களுக்கு
ஒன்று,Onru - ஒரு வார்த்தை
சொல்லுகேன்,Sollugenaen - சொல்லுகிறேன்:
கேண்மின்,Kaenmin - கேளுங்கள்;
பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும்,Pettrangal Maeykkum Piraanaar Paenum - (நீங்கள் இப்போது குடியிருக்கிற எனது இவ்வுடலானது) பசுக்களை மேய்த்தருளிய கண்ணபிரான் விரும்பி எழுந்தருளி யிருக்கைக்கு இடமான
திருக் கோயில்,Thiruk Koyil - திருக் கோயிலாயிற்று;
கண்டீர்,Kandir - முன்புள்ள நிலைமையிற் காட்டில் இன்றுள்ள நிலைமையின் வாசியைப் பாருங்கள்;
ஆழ்,Aazh - (ஸம்ஸார ஸமுத்திரத்தில் என்னை) ஆழங்காற்படுத்தின
வினை காள்,Vinai Kaal - ஓ கொடுமைகளே!
இன்னம்,Innam - மறுபடியும்
அற்றம் உரைக்கின்றேன்,Attram Uraikkindren - அறுதியாகச் சொல்லுகிறேன்;
உமக்கு,Umakku - உங்களுக்கு
இங்கு,Ingku - இவ்விடத்தில்
ஓர் பற்று இல்லை,Or Patru Illai - ஒருவகை அவலம்பமும் கிடையாது;
நடமின்,Nadamin - (இனி இவ்விடத்தை விட்டு) நடவுங்கள்.
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.