| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 449 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7 | கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7 | சிறு வரை,Siru Varai - சிறிய மலை போன்ற கொங்கை என்னும்,Kongai Ennum - முலைகளாகிற பொதும்பினில்,Podhumpinil - பொந்தில் வழுக்கி வீழ்ந்து,Vazhukki Veezhndhu - வழுக்கி விழுந்து அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு,Angu Or Muzhaiyinil Pukkitttu - (நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து அழுந்திக் கிடந்த,Azhundhik Kidandha - (அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து உழல்வேனை,Uzhalvaenai - (திரியப் போகிற என்னுடைய) வல் வினை ஆயின,Val Vinai Aayina - தீவினைகளா யிருப்பவைகளை வங்கம் கடல் வண்ணன் அம்மாள்,Vangkam Kadal Vannan Ammaaal - கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான் மாற்றி,Maatri - போக்கி யருளி பங்கப்படா வண்ணம்,Pangkap Padaa Vannam - பரிபவப் படாதபடி செய்தான்,Seidhaan - செய்தருளினான்; பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |