Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 449 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
449ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7
கொங்கைச் சிறுவரை யென்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி
அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந் துழல்வேனை
வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல் வினையாயின மாற்றி
பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-7
சிறு வரை,Siru Varai - சிறிய மலை போன்ற
கொங்கை என்னும்,Kongai Ennum - முலைகளாகிற
பொதும்பினில்,Podhumpinil - பொந்தில்
வழுக்கி வீழ்ந்து,Vazhukki Veezhndhu - வழுக்கி விழுந்து
அங்கு ஓர் முழையினில் புக்கிட்டு,Angu Or Muzhaiyinil Pukkitttu - (நரகமென்கிற) பர லோகமாகிய ஒரு குஹையினுள் புகுந்து
அழுந்திக் கிடந்த,Azhundhik Kidandha - (அங்குநின்றும் கால் பேர்க்க வொட்டாமல் அங்கேயே) அழுந்தியிருந்து
உழல்வேனை,Uzhalvaenai - (திரியப் போகிற என்னுடைய)
வல் வினை ஆயின,Val Vinai Aayina - தீவினைகளா யிருப்பவைகளை
வங்கம் கடல் வண்ணன் அம்மாள்,Vangkam Kadal Vannan Ammaaal - கப்பல்களை யுடைய கடல் போன்ற திருநிறத்தனான எம்பெருமான்
மாற்றி,Maatri - போக்கி யருளி
பங்கப்படா வண்ணம்,Pangkap Padaa Vannam - பரிபவப் படாதபடி
செய்தான்,Seidhaan - செய்தருளினான்;
பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா
பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று;
காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது.