திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 45 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
45பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 2
உடையார் கன மணியோடு ஒண் மாதுளம் பூ இடைவிரவிக் கோத்த எழில் தெழ்கி னோடு விடையேறு காபாலி ஈசன் விடுதந்தான்; உடையாய் அழேல் அழேல் தாலேலோ! உலக மளந்தானே தாலேலோ!–1-3-2
பதவுரை Show / Hide
உடை ஆர்,Udai aar - திருவரைக்குச் சேரும்படியான
கனம் மணியோடு,Kanam maniyodu - பொன் மணியையும்
இடை,Idai - நடு நடுவே
விரவி,Viravi - கலந்து
கோத்த,Kotha - கோக்கப் பட்ட
எழில்,Ezhil - அழகிய
தெழ்கினோடும்,Thezhginodum - இடைச் சரிகையையும்
ஒண் மாதளம்பூ,On maadhalampoo - அழகிய மாதளம்புக் கோவையான அரை வடத்தையும்
விடைஏறு,Vidai yeru - ரிஷப வாஹகனாய்
காபாலி,Kaabaali - கபால தாரியாய்
ஈசன் விடுதந்தான்,Eesan viduthandhaan - ஸ்வ வ்யூஹத்துக்கு நியாமகனான ருத்ரன் விடு தந்தான்-;
உடையாய்,Udaiyaai - ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல்,Azael azael - அழாதேகொள், அழாதேகொள்
தாலேலோ,Thaalelo - தாலேலோ
உலகம் அளந்தானே! தாலேலோ!,Ulagam alandhaane! Thaalelo! - தாலேலோ