| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 450 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8 | ஏதங்க ளாயின வெல்லாம் இறங்க லிடுவித்து என் னுள்ளே பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில் பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே–5-2-8 | பீதக ஆடை பிரானர்,Peethaga Aadai Piraanargal - திருப் பீதாம்பரத்தை யுடையவனான எம்பெருமான் பிரமகுரு ஆகிவந்து,Brahmaguru Aagivandhu - ப்ரஹ்மோபதேசம் பண்ணக் கடவனான ஆசாரியனாய் எழுந்தருளி போது இல்,Podhu Il - அறிவுக்கு இருப்பிடானதும் அல்,Al - அந்தர்யாமியையும் அறிய வொட்டாத) வன்மையை யுடையதுமான நெஞ்சம் கமலம்,Nenjcham Kamalam - ஹ்ருதய கமலத்தினுள் புகுந்து,Pugundhu - பிரவேசித்து என் னுள்ளே,En Nullae - எனது (அந்த) ஹிருதயத்தில் ஏதங்கள் ஆயின எல்லாம்,Eaathangal Aayina Ellaam - தோஷங்களாக இருப்பவற்றை யெல்லாம். இறங்க விடுவித்து,Iranga Viduviththu - நீக்கி என்,En - என்னுடைய சென்னித் திடரில்,Sennith Thidarul - தலையினிது பாத விலச்சினை,Paadha Vilachchinai - ஸ்ரீபாத முத்திரையை வைத்தார்,Vaiththaar - ஏறி யருளப் பண்ணினான் பட்டினம்,Pattinam - (அவ்வெம்பெருமானுடைய) பட்டணமாகிய இவ்வாத்மா பண்டு அன்று,Pandu Andru - பழைய நிலைமையை உடையதன்று; காப்பு ,Kaappu - (அவனால்) காக்கப் பெற்றது. |