| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 451 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9 | உறக லுறக லுறகல் ஒண் சுட ராழியே சங்கே அற வெறி நாந்தக வாளே அழகிய சார்ங்கமே தண்டே இறவு படாம லிருந்த எண்மர் உலோக பாலீர்காள் பறவை யரையா உறகல் பள்ளி யறைக் குறிக் கொண்மின்–5-2-9 | ஒண் சுடர்,On Sudar - அழகிய தேஜஸ்ஸை யுடைய ஆழியே,Aazhiye - திருவாழி யாழ்வானே! எறி,Eri - (எம்பெருமானால்) வீசப் படுகின்ற நாந்தக வாளே!,Naandhaka Vaaley - நந்தகமென்கிற திருக் குற்றுடை வாளே! அழகிய சார்ங்கமே,Azhagiya Saargngamae - அழகு பொருந்திய சார்ங்கமேசார்ங்கமென்கிற தநுஸ்ஸே! தண்டே,Thandae - (கௌமோதகி என்கிற) கதையே! இருந்த,Irundha - (எம்பெருமானுடைய நியமனத்திற்கு ஆட்பட்டு) இரா நின்ற எண்மர் உலோக பாலீர்காள்,Enmar Uloga Paaleerkaal - அஷ்ட திக்குப் பாலகர்களே! இறவு படாமல்,Iravu Padaamal - தப்பிப் போகாமல் சங்கே,Sangey - ஸ்ரீபஞ்சஜந்யாழ்வானே! அற,Ara - (ஆச்ரித விரோதிகளின் உடல்) அறும்படி உறகல் உறகல் உறகல்,Urakal Urakal Urakal - உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள், உறங்காதிருங்கள்; பறவை அரையா,Paravai Araiya - பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே! உறகல்,Urakal - உறங்காதிரு; பள்ளி அறை,Palli Arai - (நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்தது) (எம்பெருமானுக்குத்) திருப்பள்ளி யறையாகிய என் சரீரத்தை குறிக் கொள்மின்,Kurik Kolmin - நோக்கிக் காத்திடுங்கள். |