Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 452 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
452ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (இரண்டாம் திருமொழி - நெய்க்குடத்தை) (தம்மிடத்து எம்பெருமான் திருப்பதிகளிற்போலே விரும்பிப்புகுந்ததனால், நோய்களை அகலும்படி ஆழ்வார் கூறுதல்.) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 10
அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும்
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து
பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை
பரவுகின்றான் விட்டு சித்தன் பட்டினம் காவற் பொருட்டே–5-2-10
அரவத்து அமளியினோடும்,Aravaththu Amaliyinodum - திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும்
அழகிய பால் கடலோடும்,Azhagiya Paal Kadalodum - அழகு பொருந்திய திருப் பாற் கடலோடுங் கூட
அரவிந்தப் பாவையும் தானும்,Aravindhap Paavayum Thaanum - செந்தாமரை மகளாகிய பெரிய பிராட்டியாரும் தானும்
வந்து,Vandhu - எழுந்து அருளி
அகம்படி,Agampadi - (எனது) உடம்பாகிற ஸ்தானத்தில்
புகுந்து,Pugundhu - பிரவேசித்து,
பரவை,Paravai - (அந்தத்) திருப்பாற்கடலினுடைய
பல திசை,Pala Thisai - பல அலைகள்
மோத,Moedha - தளும்ப
பள்ளி கொள்கின்ற,Palli Kolginra - திருக் கண் வளர்ந்தருளா நின்ற
பிரானை,Piranaai - உபகாரகனான எம்பெருமானை
விட்டு சித்தன்,Vittu Siththan - பெரியாழ்வார்
பட்டினம் காவல் பொருட்டே,Pattinam Kaaval Poruttrae - ஆத்ம ரக்ஷண நிமித்தமாக
பரவுகின்றான்,Paravuginraan - போற்றுகின்றார்.