Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 453 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
453ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 1
துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப் பறித்து
புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
மக்க ளறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில்
சிக்கென வந்து பிறந்து நின்றாய் திரு மாலிருஞ்சோலை யெந்தாய்–5-3-1
மக்கள் அறுவரை,Makkal Aruvarai - உனக்கு முன்பிருந்த (ஆறு பிள்ளைகளையும்)
கல் இடை மோத,Kal Idai Moedha - (கம்ஸனானவன்) கல்லில் மோதி முடிக்க, (அதனால்)
இழந்தவள் தன்,Izhandhaval Than - (அம் மக்கள் அறுவரையும்) இழந்தவனான தேவகியினுடைய
வயிற்றில்,Vayitrril - திரு வயிற்றில்
சிக்கென வந்து,Sikkena Vandhu - சடக்கென வந்து
பிறந்து நின்றாய்,Pirandhu Nindraai - திருவவதரித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்,Thirumaalirunjcholai Endhaai - (எல்லார்க்கும் எளியவனும்படி) திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
புக்கினில் புக்கு,Pukkinil Pukku - (நீ) புகுந்தவிடங்களில் எல்லாம் (நானும்) புகுந்து
கண்டுகொண்டு,Kandukondu - உன்னை ஸேவித்து
துக்கம் சுழலையை சூழ்ந்து கிடந்த,Thukkam Suzhalaiyai Soozhndhu Kidandha - துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற
வலையை,Valaiyai - வலை போன்ற சரீரத்தில் நசையை
அற,Ara - அறும்படி
பறித்தேன்,Pariththaen - போக்கிக் கொண்ட அடியேன்
இனி,Ini - (உன்னைப்) பிரயாணப்பட்டுப் பெற்ற பின்பும்
போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (வேறிடத்திற்குப்) போகும்படி விடுவது முண்டோ?