Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 454 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
454ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 2
வளைத்து வைத்தேன் இனிப் போகலொட்டேன் உந்த னிந்திர ஞாலங்களால்
ஒளித்திடில் நின் திரு வாணை கண்டாய் நீ ஒருவர்க்கும் மெய்யனல்லை
அளித்தெங்கும் நாடும் நகரமும் தம்முடைத் தீ வினை தீர்க்கலுற்று
தெளித்து வலஞ்செய்யும் தீர்த்தமுடைத் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-2
நாடும்,Naadum - நாட்டிலுள்ளாரும்
நகரமும்,Nagaramum - நகரத்திலுள்ளாரும்
எங்கும்,Engkum - மற்றெங்குமுள்ளவர்களும்
அளித்து,Aliththu - நெருங்கி
தம்முடைய,Thammudaiya - தங்கள் தங்களுடைய
தீ வினை,Thee Vinai - துஷ்ட கர்மங்களை
தீர்க்கல் உற்று,Theerkal Utrru - ஒழிப்பத்தில் விருப்புற்று
தெளித்து,Thelizththu - ஆரவாரித்துக் கொண்டு
வலம் செய்யும்,Valam Seiyyum - பிரதக்ஷிணம் செய்யப் பெற்ற
தீர்த்தம் உடை,Theertham Udai - தீர்த்தம் விசேஷங்களையுடைய
திருமாலிருஞ்சோலை,Thirumaalirunjcholai - திருமாலிருஞ்சோலையில்
எந்தாய்,Endhaai - (எழுந்தருளியிருக்கிற) எம்பெருமானே!
வளைத்து வைத்தேன்,Valaitthu Vaiththaen - (உன்னைச்) சூழ்ந்து கொண்டேன்
இனி,Eni - இனி மேல்
போகல் ஒட்டேன்,Pogal Ottaen - (நீ வேறிடந் தேடிப்) போவதை (நான்) ஸம்மதிக்க மாட்டேன்.
உன் தன்,Un Than - உனக்கு உள்ள
இந்திர ஞாலங்களால்,Endhira Gnaalangalal - மாயச் செய்கையினால்- வல்லமையினால்
ஒளித்திடில்,Oliththidil - (உன்னை நீ) ஒளித்துக் கொண்டால்
நின் திரு ஆணை,Nin Thiru Aanai - உனது பிராட்டியின் மேலாணை.
நீ,Nee - (அப்படி ஒளிக்கலாகாது) நீ
ஒருவர்க்கும்,Oruvarkkum - ஒருவரிடத்திலும்
மெய்யன் அல்லை,Meiyan Allai - உண்மையான உக்தி அனுஷ்டானங்களை யுடையவனல்லை.