Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 456 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
456ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 4
காதம் பலவும் திரிந்துழன்றேற்கு அங்கோர் நிழலில்லை நீருமில்லை உன்
பாத நிழலல்லால் மற்றோரு யிர்ப்பிடம் நான் எங்கும் காண்கின்றிலேன்
தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர் பொய் சுற்றம் பேசிச் சென்று
பேதஞ்செய்து எங்கும் பிணம் படுத்தாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-4
குரு,Guru - குருவம்சத்திற் பிறந்த
பாண்டவர்க்காய்,Paandavarkkaai - பாண்டவர்களுக்காக
ஓர் பொய் சுற்றம் பேசி சென்று,Or Poi Sutrram Paesi Sendru - ஒரு பொய் யுறவைப் பாராட்டிக் கொண்டு
அங்கு,Angu - துரியோதனாதியரிடத்து
தூது சென்றாய்,Thoodhu Sendraai - தூது போய்
பேதம் செய்து,Paedham Seidhu - இரண்டு வகுப்பினர்க்கும் கலஹத்தை மூட்டி
இல்லை,Ellai - (பின்பு பாரத யுத்தங் கோடித்து அந்த யுத்தத்தில்) கண்டதில்லை
உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய
எங்கும்,Enggum - துரியோதனாதியரில் ஒருவர் தப்பாமல்
பிணம் படுத்தாய்,Pinam Paduththaai - பிணமாக்கி யொழித் தருளினவனே!
திருமாலிருஞ்சோலை எந்தாய்!,Thirumaalirunjcholai Endhaai - திருமாலிருஞ் சோலை மலையில் (எழுந்தருளி யிருக்கிற)
எம்பெருமானே!

காதம் பலவும்,Kaadham Palavum - பலகாத தூரமளவும்
திரிந்து உழன்றேற்கு,Thirindhu Uzhandraerku - திரிந்து அலைந்த எனக்கு
அங்கு,Angu - அவ் விடங்களில்
ஓர் நிழல் இல்லை,Or Nizhal Illai - (ஒதுங்குகைக்கு) ஒரு நிழலுங் கண்டதில்லை;
நீர்,Neer - (அன்றியும்) (காபமாற்றக் கடவதான) தண்ணீரும்
மற்று ஓர்,Matru Or - மற்றொரு
இல்லை,Ellai - கண்டதில்லை ஆராய்ந்து பார்த்தவிடத்தில்
உன் பாதம் நிழல் அல்லால்,Un Paadham Nizhal Allaalaal - உனது திருவடி நிழலொழிய
உயிர்ப்புஇடம்,Uyirppidam - ஆச்வாஸ ஹேதுவான இடத்தை
நான் எங்கும் காண்கின்றிலேன்,Naan Enggum Kaankindrilaen - நான் ஓரிடத்தும் காண்கிறேனில்லை.