| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 459 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 7 | அக்கரை யென்னு மனர்த்தக் கடலு ளழுந்தி உன் பேரருளால் இக்கரை யேறி யிளைத்திருந்தேனை அஞ்சேலென்று கை கவியாய் சக்கரமும் தடக் கைகளும் கண்களும் பீதக வாடையொடும் செக்கர் நிறத்துச் சிவப்புடையாய் திரு மாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-7 | சக்கரமும்,Chakkaramum - திருவாழியாழ்வானும் தட கைகளும்,Thada Kaigalum - பெரிய திருக்கைகளும் கண்களும்,Kangalum - திருக்கண்களும் பீதக ஆடை யொடும்,Peethaga Aadai Yodum - திருப் பீதாம்பரமும் செக்கர் நிறத்து சிவப்பு உடையாய்,Chekkar Niraththu Sivappu Udaiyaai - செவ் வானத்தின் நிறம் போன்ற நிறத்தை உடையவையாய் இருக்கப் பெற்றவனே! அக்கரை என்னும்,Akkarai Ennum - ஸம்ஸாரம் என்கிற அநர்த்த கடலுள்,Anarththa Kadalul - அநர்த்த ஸமுத்திரத்தின் உள்ளே அழுந்தி,Azhundhi - (நெடுநாள்) அழுந்திக் கிடந்து இளைத்திருந்து,Elaiththirundhu - (அதில்) வருத்ப்பட்டுக் கொண்டிருந்தது உன் பேர் அருளால்,Un Per Arulaal - (பின்பு) உனது பரம கிருகையினால் இக் கரை ஏறினேனை,Ek Karai Eaerinaenaai - இக் கரையேறிய அடியேனைக் குறித்து அஞ்சேல் என்று கை கவியாய்,Anjael Endru Kai Kaviyai - அபய ப்ரதாக முத்ரையைக் காட்டி யருள |