| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 460 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8 | அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால் தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9 | மைத்துனன் மார்களை,Maiththunan Maargalai - உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை வாழ்வித்து,Vaazhviththu - வாழச் செய்து மாற்றவர் நூற்றுவரை,Maatravar Nootruvarai - (அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும் கெடுத்தாய்,Keduththaai - ஒழித்தருளினவனே! திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே! இன்றொடு நாளை என்றே,Endrodu Naalai Endrae - இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே (கழித்த காலம்) எத்தனை காலமும் எத்தனை ஊழியும்,Ethanai Kaalamum Ethanai Oozhiyum - எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ, இத்தனை காலமும்,Ithanai Kaalamum - இத்தனை காலம் முழுவதும் போய் கிறிப்பட்டேன்,Poi Kirippattaen - (ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்; இனி,Eni - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ? சித்தம்,Siththam - (எனது) நெஞ்சானது நின்பாலது,Nin Paalathu - உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை அறிதி அன்றே,Aridhi Anrae - அறிகின்றா யன்றோ? |