Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 460 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
460ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 8
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9
மைத்துனன் மார்களை,Maiththunan Maargalai - உனது அத்தை பிள்ளைகளான பாண்டவர்களை
வாழ்வித்து,Vaazhviththu - வாழச் செய்து
மாற்றவர் நூற்றுவரை,Maatravar Nootruvarai - (அவர்களுக்குச்) சத்துருக்களாகிய துரியோதநாதியர் நூறு பேரையும்
கெடுத்தாய்,Keduththaai - ஒழித்தருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே!
இன்றொடு நாளை என்றே,Endrodu Naalai Endrae - இன்றைக்கு, நாளைக்கு என்று சொல்லிக் கொண்டே (கழித்த காலம்)
எத்தனை காலமும் எத்தனை ஊழியும்,Ethanai Kaalamum Ethanai Oozhiyum - எத்தனை காலமும் எத்தனை கல்பங்களும் உண்டோ,
இத்தனை காலமும்,Ithanai Kaalamum - இத்தனை காலம் முழுவதும்
போய் கிறிப்பட்டேன்,Poi Kirippattaen - (ஸம்ஸாரமாகிற) யந்திரத்தில் அகப்பட்டுக் கொண்டிருந்தேன்;
இனி,Eni - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக
போக விடுவது உண்டே,Poga Viduvathu Undae - (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?
சித்தம்,Siththam - (எனது) நெஞ்சானது
நின்பாலது,Nin Paalathu - உன் திறத்தில் ஈடுபட்டுள்ளமையை
அறிதி அன்றே,Aridhi Anrae - அறிகின்றா யன்றோ?