Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 461 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
461ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (மூன்றாம் திருமொழி - துக்கச்சுழலையை) (திருமாலிருஞ்சோலை எம்பெருமானைப் போகவொட்டேனென்று தடுத்தல்) (அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்) 9
அன்று வயிற்றில் கிடந்திருந்தே அடிமை செய்யலுற் றிருப்பன்
இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே
சென்றங்கு வாணனை ஆயிரந் தோளும் திருச் சக்கரமதனால்
தென்றித் திசை திசை வீழச் செற்றாய் திருமாலிருஞ் சோலை யெந்தாய்–5-3-9
அங்கு,Angu - சோணித புரத்திற்கு
சென்று,Sendru - எழுந்தருளி
வாணனை,Vaananai - பாணாஸுரனுடைய
ஆயிரம் தோளும்,Aayiram Tholum - ஆயிரந் தோள்களும்
திசை திசை,Thisai Thisai - திக்குகள் தோறும்
தென்றி வீழ,Thenri Veezha - சிதறி விழும்படி
திருச் சக்கரம் அதனால்,Thiruch Chakkaram Athanaal - சக்ராயுதத்தினால்
செற்றாய்,Settraai - நெருக்கி யருளினவனே!
திருமாலிருஞ்சோலை ஏந்தாய்!,Thirumaalirunjcholai Eaendhaai - திருமாலிருஞ்சோலையில் (எழுந்தருளி யிருக்கிற) எம்பெருமானே!
வயிற்றில் கிடந்திருந்து அன்றே,Vayitrril Kidandhirundhu Anrae - கர்ப்ப வாஸம் பண்ணுகையாகிற அன்று முதற் கொண்டே
அடிமை செய்யல்,Adimai Seiyal - (உனக்குக்) கைங்கரியம் பண்ணுவதில்
உற்றிருப்பன்,Uttriruppan - அபிநிவேசங் கொண்டிருந்த நான்
இன்று,Endru - இப்போது
இங்கு வந்து,Engu Vandhu - இத் திருமாலிருஞ்சோலை மலையில் வந்து
உன்னை,Unnai - (அனைவருக்கும் எளியனான) உன்னை
கண்டு கொண்டேன்,Kandu Kondaen - ஸேவித்துக் கொண்டேன்;
இனி போக விடுவது உண்டே,Eni Poga Viduvathu Undae - (அதில் நின்றும் விடுபட்டு ஞானம்பெற்ற) இன்று முதலாக (உன்னை) வேறிடத்திற்குப் போக ஸம்மதிக்க (என்னால்) முடியுமோ?