Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 47 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
47ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 4
சங்கின் வலம் புரியும் சேவடிக் கிண் கிணியும்
அங்கைச் சரிவளையும் நாணும் அரைத் தொடரும்
அங்கண் விசும்பில் அமரர்கள் போத்தந்தார்,
செங்கண் கருமுகிலே! தாலேலோ! தேவகி சிங்கமே தாலேலோ!–1-3-4
சங்கில்,Sangil - சங்குகளில்(சிறந்த)
வலம் புரியும்,Valam puriyum - வலம்புரிச் சங்கையும்
சே அடி,Se adi - செவ்விய திருவடிகளில் (சாத்தத் தகுந்த)
கிண்கிணியும்,Kinkin yum - சதங்கையையும்
அம் கை,Am kai - அழகிய கைகளுக்கு உரிய
சரி,Sari - முன் கை வளைகளையும்
வளையும்,Valaiyum - தோள்வளைகளையும்
நாணும்,Naanum - பொன்னரை நாணையும்
அரை தொடரும்,Arai thodarum - அரைவடத்தையும்
அம் கண்,Am kan - அழகியதாய் விசாலமான
விசும்பில்,Visumbil - ஸ்வர்க்கத்திலுள்ள
அமரர்கள்,Amarargal - தேவர்கள்
போத்தந்தார்,Poththandhaar - அனுப்பினார்கள்
செம் கண்,Sem kan - சிவந்த கண்களை யுடையையாய்
கரு முகிலே,Karu mugile - கானமேகம் போன்ற வடிவை யுமுடையையான கண்ணனே!
தாலேலோ!,Thaalelo! - தாலேலோ!
தேவகி,Devaki - தேவகியின் வயிற்றிற்பிறந்த
சிங்கமே,Singame - சிங்கக் குருகே!
தாலேலோ!,Thaalelo! - தாலேலோ!