Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 472 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
472பெரியாழ்வார் திருமொழி || 5-4 சென்னியோங்கு 10
தடவரை வாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடும் கொடி போலே
சுடர் ஒளியாய் நெஞ்சின் உள்ளே தோன்றும் என் சோதி நம்பீ
வட தடமும் வைகுந்தமும் மதிள் த்வராவதியும்
இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே -5 -4-10
தடவரை வாய், Tadavarai vaai - பெரிய பர்வதத்தில்
மிளிர்ந்து மின்னும், Milirndhu minnum - மிகவும் விளங்கா நின்றுள்ள
தவளம் நெடு கொடி போல், Thavalam nedu kodi pol - பரிசுத்தமான பெரியதொரு கொடி போல
சுடர் ஒளி ஆய், Sudar oli aai - மிக்க தேஜஸ் ஸ்வரூபியாய்
என் நெஞ்சின் உள்ளே, En nenjin ulle - எனது ஹ்ருதயத்தினுள்
தோன்றும், Thondrum - விளங்கா நின்றுள்ள
சோதி நம்பீ, Jodhi nambi - ஒளியினால் நிரம்பியவனே!
வட தடமும், Vada thadamum - வடதிசையிலுள்ள திருப்பாற்கடலும்
வைகுந்தமும், Vaigundhamum - ஸ்ரீவைகுண்டமும்
மதிள், Madhil - மதில்களை யுடைய
துவராபதியும், Thuvara pathiyum - த்வாரகையும் (ஆகிற)
இட வகைகளை, Ida vagaigalai - இடங்களை யெல்லாம்
இகழ்ந்திட்டு, Igazhindittu - உபேஷித்து விட்டு
என் பால், En paal - என்னிடத்தில்
இடவகை கொண்டனையே, ida vagai kondanaiye - வாஸ்தக புத்தியைப் பண்ணி யருளினையே! (இஃது என்ன வாத்ஸல்யம்!)