Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 48 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
48ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 5
எழிலார் திருமார்வுக்கு ஏற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமும் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுது உவனாய் நின்றான் தாலேலோ! தூமணி வண்ணனே தாலேலோ!–1-3-5
எழில் ஆர்,Ezhil aar - அழகுமிக்கிருந்துள்ள
திருமார்பிற்கு,Thirumaarpirku - வக்ஷஸ்ஸ்தலத்துக்கு
இவை ஏற்கும் என்று,Ivai erkum endru - இவை பொருந்தும் என்று
அழகிய,Azhagiya - அழகியவையான
ஐம்படையும்,Aimbadayum - பஞ்சாயுதங்களையும்
ஆரமும்,Aaramum - முத்து வடத்தையும்
கொண்டு,Kondu - எடுத்துக்கொண்டு,
வழுஇல்,Valuil - குற்றமற்ற
கொடையான்,Kodaiyaan - ஔதார்யத்தையுடையனான
வயிச்சிரவணன்,Vaichiravanan - குபேரானானவன்
தொழுது,Thozhuthu - (இவற்றைத் திருவுள்ளம்பற்ற வேணுமென்று) அஞ்ஜலி பண்ணிக்கொண்டு
உவனாய் நின்றான், தாலேலோ!,Uvanaai ninraan, Thaalelo! - உவனாய் நின்றான், தாலேலோ!
தூ மணி,Thoo mani - பழிப்பற்ற நீலமணி போன்ற
வண்ணனே,Vannane - வடிவையுடைய கண்ணனே!
தாலேலோ!,Thaalelo - தாலேலோ!