Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 49 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
49ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 6
ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும்
சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும்
மாதக்க வென்று வருணன் விடுதந்தான்,
சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6
ஓதம்,Otham - அலையெறிப்பையுடைய
கடலில்,Kadalil - ஸமுத்ரத்தில் (உண்டாய்)
ஒளி,Oli - ஒளியை யுடைத்தாய்
முத்தின்,Muththin - முத்துக்களால் கோக்கப்பட்ட
ஆரமும்,Aaramum - ஹாரத்தையும்
சாதி,Saadhi - நல்ல ஜாதியிலுண்டான
பவளமும்,Pavalamum - பவழ வடத்தையும்
சந்தம்,Santham - அழகு பொருந்திய
சரி,Sari - முன் கை வளைகளையும்
வளையும்,Valaiyum - தோல்வளைகளையும்
மா தக்க என்று,Maa thakka endru - விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று
வருணன் விடுதந்தான்,Varunan viduthandhaan - வருண தேவனானவன் விடுதந்தான்
சோதி சுடர்,Sothi sudar - மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய
முடியாய்,Mudiyaai - கிரீடத்தை யணிந்த கண்ணனே!
தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . !
சுந்தரம் தோளனே,Sundharam tholane - அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே!
தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . !