| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 49 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 6 | ஓதக் கடலின் ஒளி முத்தி னாரமும் சாதிப் பவளமும் சந்தச் சரிவளையும் மாதக்க வென்று வருணன் விடுதந்தான், சோதிச் சுடர்முடியாய் தாலேலோ! சுந்தரத் தோளனே தாலேலோ!–1-3-6 | ஓதம்,Otham - அலையெறிப்பையுடைய கடலில்,Kadalil - ஸமுத்ரத்தில் (உண்டாய்) ஒளி,Oli - ஒளியை யுடைத்தாய் முத்தின்,Muththin - முத்துக்களால் கோக்கப்பட்ட ஆரமும்,Aaramum - ஹாரத்தையும் சாதி,Saadhi - நல்ல ஜாதியிலுண்டான பவளமும்,Pavalamum - பவழ வடத்தையும் சந்தம்,Santham - அழகு பொருந்திய சரி,Sari - முன் கை வளைகளையும் வளையும்,Valaiyum - தோல்வளைகளையும் மா தக்க என்று,Maa thakka endru - விலையில் சிறந்து தகுதியாயிருந்துள்ளவை என்று வருணன் விடுதந்தான்,Varunan viduthandhaan - வருண தேவனானவன் விடுதந்தான் சோதி சுடர்,Sothi sudar - மிக்க ஜ்யோதிஸ்ஸை யுடைய முடியாய்,Mudiyaai - கிரீடத்தை யணிந்த கண்ணனே! தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . ! சுந்தரம் தோளனே,Sundharam tholane - அழகிய திருத் தோள்களை யுடைய கண்ணனே! தாலேலோ. . !,Thaalelo! - தாலேலோ. . ! |