திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 50 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
50பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 7
கானார் நறுந்துழாய் கை செய்த கண்ணியும் வானார் செழுஞ்சோலைக் கற்பகத்தின் வாசிகையும் தேனார் மலர் மேல் திரு மங்கை போத்தந்தாள், கோனே! அழேல் அழேல் தாலேலோ! குடந்தைக் கிடந்தானே தாலேலோ!–1-3-7
பதவுரை Show / Hide
தேன் ஆர்,ThenAar - தேன் நிறைந்துள்ள
மலர்மேல்,Malarmel - (செந்தாமரை) மலரிலுறைகின்ற
திருமங்கை,Thirumangai - பெரிய பிராட்டியார்
கான் ஆர்,Kaan aar - காட்டிலுண்டான
நறு துழாய்,Naru thuzhaai - பரிமளம் மிக்க துளசியாலே
கை செய்த,Kai seidha - தொடுத்த
கண்ணியும்,Kanniyum - மாலையையும்
வான் ஆர்,Vaan aar - சுவர்க்க லோகத்தில் நிறைய வளர்ந்துள்ள
செழு,Sezhu - செழுமை தங்கிய
சோலை,Solai - சோலையாய்த் தழைத்த
கற்பகத்தின்,Karpagaththin - கல்ப வ்ருக்ஷத்தின் பூக்களால் தொடுத்த
வாசிகையும்,Vaasikaiyum - திரு நெற்றி மாலையையும்
போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்
கோனே,Kone - ஸர்வ ஸ்வாமியான கண்ணனே!
அழேல் அழேல் தாலேலோ!,Azael azael Thaalelo! - அழேல் அழேல் தாலேலோ!
குடந்தை,Kudanthai - திருக்குடந்தையிலே
கிடந்தானே,Kidandhaane - கண் வளந்தருளுகிற ஸ்ர்வேச்வானே!
தாலேலோ!,Thaalelo! - தாலேலோ!