திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 51 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
51பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 8
கச்சொடு பொற் சுரிகை காம்பு கனவளை உச்சி மணிச் சுட்டி ஒண்தாள் நிரைப் பொற்பூ அச்சுதனுக்கென்று அவனியாள் போத்தந்தாள் நச்சு முலையுண்டாய் தாலேலோ! நாராயணா அழேல் தாலேலோ!!–1-3-8
பதவுரை Show / Hide
கச்சொடு,Kachodu - கச்சுப் பட்டையையும்
பொன்,Pon - பொன்னாற்செய்த
சுரிகை,Surikai - உடை வாளையும்
காம்பு,Kaambu - கரை கட்டிய சேலையையும்
கனம்,Kanam - கநக மயமான
வளை,Valai - தோள் வளைகளையும்
மணி,Mani - ரத்நமிழைத்துச் செய்யப்பட்டதாய்
உச்சி,Ucchi - உச்சியிலே சாத்தத் தக்கதான
சுட்டி,Sutti - சுட்டியையும்
ஒண் தாள்,On thaal - அழகிய காம்புகளை யுடைத்தாய்
நிரை,Nirai - ஒழுங்கான
பொற்பூ,Porpu - பொற்பூவையும்
அச்சுதனுக்கு என்று,Achuthanukku endru - ‘கண்ணபிரானுக்கு (க்கொடுங்கோள்)’ என்று
அவனியாள்,Avaniyaal - பூமிப்பிராட்டியானவள்
போத்தந்தாள்,Poththandhaal - அனுப்பினாள்;
நஞ்சு,Nanju - விஷமேற்றின
முலை,Mulai - பூதனையின் முலையின் பாலை
உண்டாய்,Undaai - உண்ட கண்ணனே!
தாலேலோ;,Thaalelo - தாலேலோ;
நாராயணா! அழேல்! தாலேலோ,Narayana! Azael! Thaalelo - நாராயணா! அழேல்! தாலேலோ