Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 53 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
53ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10
வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட
அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய
செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல்
எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10
வஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த
பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய
முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய்
அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை
ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி
தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை
செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள்
சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற
புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த
பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த)
சொல்,Sol - இப்பாசுரங்கள்
எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல்
வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு
இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம்.
தான் ஏ,Thaan e - அசை