| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 53 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து - மூன்றாம் திருமொழி -மாணிக்கம் கட்டி) (கண்ணனைத் தொட்டிலிலிட்டுத் தாலாட்டுதல்: தாலப்பருவம்) 10 | வஞ்சனையால் வந்த பேய்ச்சி முலை யுண்ட அஞ்சன வண்ணனை ஆய்ச்சி தாலாட்டிய செஞ்சொல் மறையவர் சேர் புதுவைப் பட்டன் சொல் எஞ்சாமை வல்லவர்க்கு இல்லை இடர் தானே–1-3-10 | வஞ்சனையால் வந்த,Vanchanaiyaal vanda - வஞ்சக வேஷத்தோடே வந்த பேய்ச்சி,Peychi - பூதனையினுடைய முலை உண்ட,Mulai unda - முலையை அமுது செய்தவனாய் அஞ்சனம் வண்ணனை,Anjanam vannanai - மை போன்ற நிறத்தை யுடையவனான கண்ண பிரானை ஆய்ச்சி,Aaychi - யசோதைப் பிராட்டி தாலாட்டிய,Thaalattiya - தாலாட்டின படிகளை செம் சொல் மறையவர்,Sem sol maraivar - செவ்விய சொற்கள் நிறைந்த வேதங்களில் வல்லவரான ஸ்ரீவைஷ்ணவர்கள் சேர்,Ser - நித்ய வாசம் பண்ணப் பெற்ற புதுவை,Puthuvai - ஸ்ரீவில்லிபுத்தூரிலவதரித்த பட்டன்,Pattan - பெரியாழ்வார் (அருளிச் செய்த) சொல்,Sol - இப்பாசுரங்கள் எஞ்சாமை,Enjaamai - குறைவு படாமல் வல்லவர்க்கு,Vallavarkku - ஓத வல்லவர்க்கு இடர் இல்லை,Idar illai - துன்பம் ஒன்றுமில்லையாம். தான் ஏ,Thaan e - அசை |