Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 54 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
54ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 1
தன்முகத் துச்சுட்டி தூங்கத் தூங்கத் தவழ்ந்து போய்
பொன்முகக் கிண்கிணி யார்ப்பப் புழுதி யளைகின்றான்
என்மகன் கோவிந்தன் கூத்தினை இள மாமதீ
நின்முகம் கண்ணுள வாகில் நீ இங்கே நோக்கிப் போ–1-4-1
இள,Ila - இளமை தங்கிய
மா மதீ,Maa madhi - அழகிய சந்திரனே!
தன் முகத்து,Than mugaththu - தன் முகத்தில் (விளங்குகிற)
சுட்டி,Sutti - சுட்டியானது
தூங்க தூங்க,Thoonga thoonga - பல காலும் தாழ்ந்து அசையவும்
பொன் முகம்,Pon mugam - அழகிய முகத்தை யுடைய
கிண் கிணி,Kin kini - சதங்கைகளானவை
ஆர்ப்ப,Aarppa - கிண் கிண் என்றொலிக்கவும்
தவழ்ந்து போய்,Thavazhnthu poy - (முற்றத்தில்) தவழ்ந்து போய்
புழுதி,Puzhuthi - தெருப்புழுதி மண்ணை
அளைகின்றான்,Alaikindraan - அளையா நிற்பவனும்
என் மகன்,En magan - எனக்குப் பிள்ளையுமான
கோவிந்தன்,Govindhan - கண்ண பிரானுடைய
கூத்தினை,Kooththinai - சேஷ்டைகளை
நின் முகம்,Nin mugam - உன் முகத்தில்
கண் உள ஆகில்,Kan ulla aagil - கண் உண்டேயானால்
நீ இங்கே நோக்கி போ,Nee ingae nokki po - நீ இங்கே பார்த்துப் போ.