| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 55 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 2 | என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான் தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2 | மா மதீ !,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு ஓர் இன் அமுது,Or in amudhu - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய் எம்பிரான்,Empiraan - எனக்கு உபகாரகனான என் சிறுக் குட்டன்,En siruk kuttan - என் மகனான கண்ணன் தன் சிறு கைகளால்,Than siru kaigalal - தன்னுடைய சிறிய கைகளால் காட்டிக் காட்டி,Kaattik kaatti - பலகாலும் (உன்னையே) காட்டி அழைக்கின்றான்,Azaikkindran - அழையா நின்றான்; அஞ்சனம் வண்ணனோடு,Anjanam vannanodu - மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு ஆடல் ஆட,Aadal aada - விளையாட உறுதியேல்,Urudhiyael - கருதினாயாகில் மஞ்சில்,Manjil - மேகத்திலே மறையாது,Maraiyaadhu - சொருகி மறையாமல் மகிழ்ந்து ஓடி வா,Magizhndhu odi va - உகந்து ஓடி வா. |