திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 55 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
55பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 2
என் சிறுக் குட்டன் எனக்கோரின்னமுது எம்பிரான் தன் சிறுக் கைகளால் காட்டிக் காட்டி யழைக்கின்றான் அஞ்சன வண்ணனோடு ஆடலாட உறுதியேல் மஞ்சில் மறையாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-2
பதவுரை Show / Hide
மா மதீ !,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
எனக்கு,Enakku - (தாயாகிய) எனக்கு
ஓர் இன் அமுது,Or in amudhu - விலக்ஷணமாய் மதுரமாயிருப்பதொரு அம்ருதம் போன்றவனாய்
எம்பிரான்,Empiraan - எனக்கு உபகாரகனான
என் சிறுக் குட்டன்,En siruk kuttan - என் மகனான கண்ணன்
தன் சிறு கைகளால்,Than siru kaigalal - தன்னுடைய சிறிய கைகளால்
காட்டிக் காட்டி,Kaattik kaatti - பலகாலும் (உன்னையே) காட்டி
அழைக்கின்றான்,Azaikkindran - அழையா நின்றான்;
அஞ்சனம் வண்ணனோடு,Anjanam vannanodu - மை போன்ற வடிவை யுடைய இக் கண்ண பிரானோடு
ஆடல் ஆட,Aadal aada - விளையாட
உறுதியேல்,Urudhiyael - கருதினாயாகில்
மஞ்சில்,Manjil - மேகத்திலே
மறையாது,Maraiyaadhu - சொருகி மறையாமல்
மகிழ்ந்து ஓடி வா,Magizhndhu odi va - உகந்து ஓடி வா.