Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 56 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
56ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 3
சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்
எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய்
வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற
கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3
அம்புலி,Ambuli - சந்த்ரனே! (உன்னுடைய)
ஒளி,Oli - ஒளி பொருந்திய
வட்டம்,Vattam - மண்டலமானது (எப்போதும்)
சுற்றும் சூழ்ந்து,Sutrum soozhndhu - நாற்புறமும் சுழன்று
எங்கும்,Engum - எல்லாத் திசைகளிலும்
சோதி பரந்து,Sothi parandhu - ஒளி நிரம்பி யிருக்குமாறு
எத்தனை செய்யிலும்,Eththanai seyyilum - இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும்
என் மகன்,En magan - என் மகனான கண்ண பிரானுடைய
முகம்,Mugam - திருமுக மண்டலத்துக்கு
நேர் ஒவ்வாய்,Ner ovvaai - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்;
வித்தகன்,Viththagan - ஆச்சர்யப் படத் தக்கவனாய்
வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலையிலே
வாணன்,Vaanan - நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான்
உன்னை விளிக்கின்ற,Unnai vilikkindra - உன்னை அழைக்கிற
கை தலம்,Kai thalam - திருக் கைத் தலத்தில்
நோவாமே,Novaame - நோவு மிகாத படி
கடிது ஓடி வா,Kadidhu odi va - சீக்கிரமாய் ஓடிவா.