| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 56 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 3 | சுற்றும் ஒளி வட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும் எத்தனை செய்யிலும் என் மகன் முகம் நேரொவ்வாய் வித்தகன் வேங்கட வாணன் உன்னை விளிக்கின்ற கைத்தலம் நோவாமே அம்பு லீகடி தோடிவா–1-4-3 | அம்புலி,Ambuli - சந்த்ரனே! (உன்னுடைய) ஒளி,Oli - ஒளி பொருந்திய வட்டம்,Vattam - மண்டலமானது (எப்போதும்) சுற்றும் சூழ்ந்து,Sutrum soozhndhu - நாற்புறமும் சுழன்று எங்கும்,Engum - எல்லாத் திசைகளிலும் சோதி பரந்து,Sothi parandhu - ஒளி நிரம்பி யிருக்குமாறு எத்தனை செய்யிலும்,Eththanai seyyilum - இப்படி உன்னை எவ்வளவு அழகு செய்து கொண்டாலும் என் மகன்,En magan - என் மகனான கண்ண பிரானுடைய முகம்,Mugam - திருமுக மண்டலத்துக்கு நேர் ஒவ்வாய்,Ner ovvaai - பூர்ணமாக ஒப்பாக மாட்டாய்; வித்தகன்,Viththagan - ஆச்சர்யப் படத் தக்கவனாய் வேங்கடம்,Vengadam - திருவேங்கடமலையிலே வாணன்,Vaanan - நின்றாக வாழுமவனான இக்கண்ணபிரான் உன்னை விளிக்கின்ற,Unnai vilikkindra - உன்னை அழைக்கிற கை தலம்,Kai thalam - திருக் கைத் தலத்தில் நோவாமே,Novaame - நோவு மிகாத படி கடிது ஓடி வா,Kadidhu odi va - சீக்கிரமாய் ஓடிவா. |