| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 59 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 6 | தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன் கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான் உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில் விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6 | விண் தனில்,Vin thanil - ஆகாசத்திலே மன்னிய,Manniya - பொருந்திய மா மதீ!,Maa madhi - பெருமை தங்கிய சந்திரனே! தண்டொடு,Thandodu - ‘கௌமோதகி’ என்னும் கதையையும் சக்கரம்,Chakaram - திருவாழி யாழ்வானையும் சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும் ஏந்தும்,Eendum - ஏந்தியிரா நின்றுள்ள தட,Thada - விசாலமான கையன்,kaiyan - கைகளை யுடைய இக் கண்ண பிரான் கண் துயில் கொள்ள கருதி,Kann thuyil kollak karudhi - திருக்கண் வளர்ந்தருள நினைத்து கொட்டாவி கொள்கின்றான்,Kottaavi kolkindraan - கொட்டாவி விடாநின்றான். உறங்காவிடில்,Urangavidil - (இப்போது இவன்) உறங்காதொழிந்தால் உண்ட,Unda - அமுது செய்யப் பட்டிருக்கிற முலைப்பால்,Mulaippaal - ஸ்தந்யமானது அறா,Araa - ஜரிக்கமாட்டாது; ஆகையால் விரைந்து ஓடிவா,Virainthu odiva - விரைந்து ஓடிவா |