Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 59 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
59ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 6
தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்
கண் துயில் கொள்ளக் கருதிக் கொட்டாவி கொள்கின்றான்
உண்ட முலைப் பாலறா கண்டாய் உறங்கா விடில்
விண் தனில் மன்னிய மா மதீ விரைந்தோடி வா–1-4-6
விண் தனில்,Vin thanil - ஆகாசத்திலே
மன்னிய,Manniya - பொருந்திய
மா மதீ!,Maa madhi - பெருமை தங்கிய சந்திரனே!
தண்டொடு,Thandodu - ‘கௌமோதகி’ என்னும் கதையையும்
சக்கரம்,Chakaram - திருவாழி யாழ்வானையும்
சார்ங்கம்,Saarngam - ஸ்ரீசார்ங்கமென்னும் வில்லையும்
ஏந்தும்,Eendum - ஏந்தியிரா நின்றுள்ள
தட,Thada - விசாலமான
கையன்,kaiyan - கைகளை யுடைய இக் கண்ண பிரான்
கண் துயில் கொள்ள கருதி,Kann thuyil kollak karudhi - திருக்கண் வளர்ந்தருள நினைத்து
கொட்டாவி கொள்கின்றான்,Kottaavi kolkindraan - கொட்டாவி விடாநின்றான்.
உறங்காவிடில்,Urangavidil - (இப்போது இவன்) உறங்காதொழிந்தால்
உண்ட,Unda - அமுது செய்யப் பட்டிருக்கிற
முலைப்பால்,Mulaippaal - ஸ்தந்யமானது
அறா,Araa - ஜரிக்கமாட்டாது; ஆகையால்
விரைந்து ஓடிவா,Virainthu odiva - விரைந்து ஓடிவா