Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 60 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
60ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 7
பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள்
ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன்
மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல்
மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7
மா மதீ!,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே!
பாலகன் என்று,Baalagan endru - ‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று
பரிபவம் செய்யேல்,Paripavam seiyael - திரஸ்கரியாதே;
பண்டு ஒருநாள்,Pandu orunaal - முன்பொரு காலத்திலே
ஆலின் இலை,Aalin ilai - ஆலந்தளிரிலே
வளர்ந்த,Valarntha - கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற
சிறுக்கனவன்,Sirukkanavan - அந்த சிறுப்பிள்ளையானவன்
இவன்,Ivan - இவனாகிறான் காண்;
வெகுளும் ஏல்,Vegulum ael - (இவன்) சீறினானாகில்
மேல் எழப் பாய்ந்து,Mael ezha painthu - (உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து
பிடித்துக் கொள்ளும்,Pidiththu kollum - (உன்னைப்) பிடித்துக் கொள்வான்;
மாலை,Maalai - இம் மஹா புருஷனை
மதியாதே,Madhiyadhae - அவமதியாமல்
மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odiva - மகிழ்ந்து ஓடிவா