| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 60 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 7 | பாலக னென்று பரிபவம் செய்யேல் பண்டொரு நாள் ஆலி னிலை வளர்ந்த சிறுக்கனவன் இவன் மேலெழப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும் வெகுளுமேல் மாலை மதியாதே மா மதீ மகிழ்ந்தோடி வா–1-4-7 | மா மதீ!,Maa madhi - பெருமை பொருந்தியிரா நின்ற சந்திரனே! பாலகன் என்று,Baalagan endru - ‘இவனொரு சிறு பயலன்றோ’ என்று பரிபவம் செய்யேல்,Paripavam seiyael - திரஸ்கரியாதே; பண்டு ஒருநாள்,Pandu orunaal - முன்பொரு காலத்திலே ஆலின் இலை,Aalin ilai - ஆலந்தளிரிலே வளர்ந்த,Valarntha - கண் வளர்ந்தவனாகப் புராணங்களிலே சொல்லப் படுகிற சிறுக்கனவன்,Sirukkanavan - அந்த சிறுப்பிள்ளையானவன் இவன்,Ivan - இவனாகிறான் காண்; வெகுளும் ஏல்,Vegulum ael - (இவன்) சீறினானாகில் மேல் எழப் பாய்ந்து,Mael ezha painthu - (உன் மேல்) ஒரு பாயலாகப் பாய்ந்து பிடித்துக் கொள்ளும்,Pidiththu kollum - (உன்னைப்) பிடித்துக் கொள்வான்; மாலை,Maalai - இம் மஹா புருஷனை மதியாதே,Madhiyadhae - அவமதியாமல் மகிழ்ந்து ஓடிவா,Magizhndhu odiva - மகிழ்ந்து ஓடிவா |