| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 61 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 8 | சிறியனென்று என்னிளஞ் சிங்கத்தை இகழேல் கண்டாய் சிறுமையின் வார்த்தையை மாவலி யிடைச் சென்று கேள் சிறுமைப் பிழை கொள்ளில் நீயும் உன் தேவைக்குரியை காண் நிறை மதீ நெடுமால் விரைந்து உன்னைக் கூவுகின்றான்–1-4-8 | நிறை மதி,Nirai madhi - பூர்ண சந்திரனே! என் இள சிங்கத்தை,En ila singaththai - எனக்குச் சிங்கக்குரு போன்ற கண்ணபிரானை சிறியன் என்று,Siriyan endru - (உபேக்ஷிக்கைக்கு உறுப்பான) சிறுமையை யுடையவனாக நினைத்து இகழேல்,Izhalael - அவமதியாதே; சிறுமையில்,Sirumaiyil - (இவனுடைய) பால்யத்தில் நிடந்த வார்த்தையை,Vaarthaiyai - செய்கையை மாவலி இடை சென்று கேள்,Maavali idai sendru kel - மஹாபலியிடம் போய்க் கேட்டுக்கொள்; சிறுமை பிழை கொள்ளில்,Sirumai pizhai kollil - (இப்படி யுள்ளவன் விஷயத்தில்) சிறுமை நினைத்தலிது மஹாபாரதம் என்று நினைத்தாயாகில் நீயும்,Neeyum - (அப்போது) நீயும்; உன் தேவைக்கு,Un thevaikku - (அஜன் விஷயத்தில்) நீ பண்ணக் கூடிய அடிமைக்கு உரியை,Uriyai - தகுந்தவனாவாய் ; (அதெல்லாமப்படி நிற்க;) நெடு மால்,Nedu maal - ஸர்வ ஸ்மாத் பரனான இவன் விரைந்து உன்னை கூவுகின்றான்,Virainthu unnai koovuginraan - (‘மகிழ்ந்து ஓடி வா’ என்று வருவிக்க. ) |