| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 63 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 10 | மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10 | மை,Mai - மையணிந்த தட,Thad - விசாலமாயிராநின்ற கண்ணி,Kanni - கண்களை யுடையளான அசோதை,Asothai - யசோதையானளவள் தன் மகனுக்கு,Than maganukku - தன் மகனான கண்ணனுக்கு ஒத்தன சொல்லி,Oththana solli - நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி உரைத்த,Uraitha - (சந்திரனை நோக்கிச்)சொன்ன இவை மாற்றம்,Ivai maatram - இப் பாசுரத்தை ஒளி,Oli - ஒளி பொருந்திய புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய் வித்தகன்,Viththagan - (மங்களாசாஸநி) ஸமர்த்தரான விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வாராலே விரித்த,Viriththa - விரித்து அருளிச் செய்யப்பட்ட தமிழ்,Tamil - த்ராவிட பாஷாரூபமான இவை,Ivai - இப் பாசுரங்கள் பத்தையும் எத்தனையும்,Eththanaiyum - ஏதேனுமொருபடியாக சொல்ல வல்லவர்க்கு,Solla vallavarkku - ஓத வல்லவர்களுக்கு இடர் இல்லை,Idar illai - துன்பமொன்றுமில்லை. |