திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2 · அடைவு

and/or and/or Clear

Search Results for: 63 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
63பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-நான்காம் திருமொழி - தன் முகத்து) (சந்திரனை அழைத்தல், அம்புலிப்பருவம்) 10
மைத்தடங் கண்ணி யசோதை தன் மகனுக்கு இவை ஒத்தன சொல்லி உரைத்த மாற்றம் ஒளி புத்தூர் வித்தகன் விட்டுசித்தன் விரித்த தமிழிவை எத்தனையும் சொல்ல வல்ல வர்க்கு இட ரில்லையே–1-4-10
பதவுரை Show / Hide
மை,Mai - மையணிந்த
தட,Thad - விசாலமாயிராநின்ற
கண்ணி,Kanni - கண்களை யுடையளான
அசோதை,Asothai - யசோதையானளவள்
தன் மகனுக்கு,Than maganukku - தன் மகனான கண்ணனுக்கு
ஒத்தன சொல்லி,Oththana solli - நினைவுக்கும் சொலவுக்கும் சேர்ந்திருப்பவற்றைச் சொல்லி
உரைத்த,Uraitha - (சந்திரனை நோக்கிச்)சொன்ன
இவை மாற்றம்,Ivai maatram - இப் பாசுரத்தை
ஒளி,Oli - ஒளி பொருந்திய
புத்தூர்,Puththoor - ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்தவராய்
வித்தகன்,Viththagan - (மங்களாசாஸநி) ஸமர்த்தரான
விட்டு சித்தன்,Vittu siththan - பெரியாழ்வாராலே
விரித்த,Viriththa - விரித்து அருளிச் செய்யப்பட்ட
தமிழ்,Tamil - த்ராவிட பாஷாரூபமான
இவை,Ivai - இப் பாசுரங்கள் பத்தையும்
எத்தனையும்,Eththanaiyum - ஏதேனுமொருபடியாக
சொல்ல வல்லவர்க்கு,Solla vallavarkku - ஓத வல்லவர்களுக்கு
இடர் இல்லை,Idar illai - துன்பமொன்றுமில்லை.