| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 64 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 1 | உய்ய உலகு படைத்து உண்ட மணிவயிறா ஊழிதொறு ஊழி பல ஆலின் இலையதன்மேல் பைய உயோகு-துயில் கொண்ட பரம்பரனே பங்கய நீள் நயனத்து அஞ்சன மேனியனே செய்யவள் நின் அகலம் சேமம் எனக் கருதி செல்வு பொலி மகரக் காது திகழ்ந்து இலக ஐய எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே –1-5-1 | உய்ய,Uyya - (ஆத்மாக்கள்) உஜ்ஜீவிக்கைக்காக உலகு,Ulagu - லோகங்களை படைத்து,Padaiththu - ஸ்ருஷ்டித்து உண்ட,Unda - (பின்பு ப்ரளயம் வந்தபோது அவற்றை) உள்ளே வைத்து ரக்ஷித்த மணி வயிறா,Mani vayiraa - அழகிய வயிற்றை யுடையவளே பல ஊழி ஊழி தொறு,Pala oozhi oozhi thoru - பல கல்பங்கள் தோறும் ஆலின் இலை அதன் மேல்,Aalin ilai athan mel - ஆலிலையின் மேல் பைய,Paiya - மெள்ள உயோகு துயில் கொண்ட,Uyogu thuyil konda - யோகநித்திரை செய்தருளின பரம் பரனே,Param parane - பர ஸ்மாத் பரனானவனே! பங்கயம்,Pangayam - தாமரை மலர் போன்று நீள்,Neel - நீண்டிருக்கின்ற நயனம்,Nayanam - திருக் கண்களையும் அஞ்சனம்,Anjanam - மை போன்ற மேனியனே ஐய,Meniyaane aiya - திருமேனியை யுடைய ஸர்வேச்வரனே! செய்யவள்,Seyyaval - செந்தாமரை மலரிற் பிறந்த பிராட்டிக்கிருப்பிடமான நின் அகலம்,Nin akalam - உன் திரு மார்வானது சேமம் என கருதி,Semam ena karuthi - (இந்நிர்த்தனத்தால் அசையாமல்) ரஷையை உடைத்தாக வேணுமென்று நினைத்துக் கொண்டு செல்வு பொலி,Selvu poli - ஐச்வர்ய ஸம்ருத்திக்கு ஸூசகங்களான மகரம்,Makaram - திரு மகரக் குழைகளோடு கூடின காது,Kaadhu - திருக் காதுகளானவை திகழ்ந்து இலக,Thigazhnthu ilaga - மிகவும் விளங்கும்படி எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |