| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 65 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 2 | கோளரியின்னுருவங்கொண்டுஅவுணனுடலம் குருதிகுழம்பியெழக்கூருகிரால்குடைவாய். மீளஅவன்மகனை மெய்ம்மைகொளக்கருதி மேலையமரர்பதிமிக்குவெகுண்டுவர காளநன்மேகமவைகல்லொடு கால்பொழியக் கருதிவரைக்குடையாக்காலிகள்காப்பவனே. ஆள. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-2 | கோன்,Kon - வலிமையை யுடைய அரியின்,Ariyin - (நா) சிங்கத்தின் உருவம் கொண்டு,Uruvam kondu - வேஷங்கொண்டு அவுணன்,Avunan - ஹிரண்யாஸுரனுடைய உடலம்,Udalam - சரீரத்தில் குருதி,Kuruthi - ரத்தமானது குழம்பி எழ,Kuzhambi ezha - குழம்பிக் கிளரும்படியாகவும் அவன்,Avan - அவ்வஸுரனானவன் மீள,Meela - மறுபடியும் மகனை,Maganai - தன் மகனான ப்ரஹ்லாதனை மெய்ம்மை கொள கருதி,Meimmai kola karuthi - ஸத்யவாதி யென்று நினைக்கும் படியாகவும் திருவுள்ளம் பற்றி கூர் உகிரால்,Koor ugiraal - கூர்மையான நகங்களாலே குடைவாய்,Kudaivai - (அவ்வசுரனுடலைக்) கிழித்தருளினவனே! மேலை,Melai - மேன்மை பொருந்திய அமரர் பதி,Amarar pathi - தேவேந்திரன் மிக்கு வெகுண்டு வா,Mikku vekundu vaa - மிகவும் கோபித்துவா (அதனால்) காளம்,Kaalam - கறுத்த நில்,Nil - சிறந்த மேகம் அவை,Megam avai - மேகங்களானவை கல்லொடு,Kallodu - கல்லோடு கூடின கார் பொழிய,Kaar poliya - வர்ஷத்தைச் சொரிய கருதி,Karuthi - (‘இம்மலையே உங்களுக்கு ரக்ஷகம் இச் சோற்றை இதுக்கிடுங்கோள் ‘என்று முன்பு இடையர்க்குத் தான் உபதேசித்ததை) நினைத்து வரை,Varai - (அந்த) கோவர்த்தநகிரியை குடையா,Kudaiyaa - குடையாகக்கொண்டு காலிகள்,Kaaligal - பசுக்களை காப்பவனே,Kaappavane - ரக்ஷித்தருளினவனே! ஆன,Aana - (இப்படி ரக்ஷிக்கைக் குறுப்பான) ஆண்பிள்ளைத் தனமுடையவனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |