திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை
உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி
| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 655 | பெருமாள் திருமொழி || (இருள் இரிய) - இருள் இரிய திருவரங்கப் பெருமானை கண்டு என்றுகொல் மகிழ்வேன் எனல் 9 | தூராத மனக் காதல் தொண்டர் தங்கள்
குழாம் குழுமி திரு புகழ்கள் பலவும் பாடி
ஆராத மனக் களிப்போடு அழுத கண்ணீர்
மழை சோர நினைந்து உருகி ஏத்தி நாளும்
சீர் ஆர்ந்த முழ வோசை பரவை காட்டும்
திரு வரங்கத்து அரவணையில் பள்ளி கொள்ளும்
போராழி அம்மானை கண்டு துள்ளி
பூதலத்தில் என்று கொலோ புரளும் நாளே? | பதவுரை Show / Hideதூராத காதல் மனம், Thooradha Kaadhal Manam - ஒரு நாளும் த்ருப்தி பெறாத ஆசை கொண்ட மனத்தை யுடையவரான தொண்டர் தங்கள் குழாம், Thondar Thangal Kuzhaam - ஸ்ரீ வைஷ்ணவர்களின் கோஷ்டியிலே குழுமி, Kuzhumi - கூடி திரு புகழ்கள் பலவும் பாடி, Thiru Pugazhgal Palavum Paadi - (எம்பெருமானது) கீர்த்திகளெல்லாவற்றையும் (வாயாரப்) பாடி ஆராத மனம் களிப்போடு, Aaraadha Manam Kalipodu - (அவ்வளவிலும்) த்ருப்தி பெறாத மநஸ்ஸிலுள்ள ஆனந்தத்தோடே அழுத கண் நீர், Azhudha Kan Neer - அழுத கண்களிலுண்டான நீர்த் துளிகள் மழை சோர, Mazhai Soora - மழை போல் பெருகி வர நினைந்து உருகி ஏந்தி, Ninaindhu Urugi Aendhi - (எம்பெருமானை) நினைத்து (அத்தாலே) மனமுருகி ஸ்தோத்திரம் பண்ணி, நாளும், Naalum - எப்போதும் சீர் ஆர்ந்த முழவு ஓசை, Seer Aarntha Muzhavu Oosai - நல்ல வாத்யங்களின் கோஷமானது பரவை காட்டும், Paravai Kaatum - கடலோசை போல் முழங்கப் பெற்ற போர் ஆழி, Por Aazhi - (பகைவரோடு) யுத்தஞ்செய்வதையே தொழிலாக வுடைய அம்மானை, Ammanai - எம்பெருமானை கண்டு, Kandu - ஸேவிக்கப் பெற்று துள்ளி, Thulli - ஆநந்தத்துக்குப் போக்கு வீடாகத்) தலை கால் தெரியாமல் கூத்தாடி பூதலத்திலே, Poothalaththile - பூமியிலே புரளும் நாள் என்று கொல், Purallum Naal Endru Kol - (உடம்பு தெரியாமல்) புரள்வது என்றைக்கோ!. பரவை, Paravai - கடல் பரவியது: ஐ-கருத்தாய்ப் பொருள் விகுதி. |