Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 66 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
66ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 3
நம்முடைநாயகனே. நான்மறையின்பொருளே.
நாவியுள்நற்கமலநான்முகனுக்கு ஒருகால்
தம்மனையானவனே. தரணிதலமுழுதும்
தாரகையின்னுலகும்தடவிஅதன்புறமும்
விம்மவளர்ந்தவனே. வேழமும்ஏழ்விடையும்
விரவியவேலைதனுள்வென்றுவருமவனே.
அம்ம. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.1-5-3
ம்முடை,Mmudai - எங்களுக்கு
நாயகனே,Naayakane - நாதனானவனே!
நால் மறையின்,Naal maraiyin - நாலு வேதங்களுடைய
பொருளே,Porule - பொருளாயிருப்பவனே!
நாபியுள்,Naabiyul - திருநாபியில் முளைத்திராநின்ற
நல் கமலம்,Nal kamalam - நல்ல தாமரைமலரிற் பிறந்த
நான்முகனுக்கு,Naanmukhanukku - பிரமனுக்கு
ஒருகால்,Orukaal - அவன் வேதத்தைப் பறிகொடுத்துத் திகைத்த காலத்தில்
தம்மனை ஆனவனே,Thammanai aanavane - தாய் போலே பரிந்து அருளினவனே!
தரணி தலம் முழுதும்,Tharani thalam muzuthum - பூமி யடங்கலும்
தாரகையின் உலகும்,Thaarakaiyin ulakum - நக்ஷத்ர லோக மடங்கலும்
தடவி,Thadavi - திருவடிகளால் ஸ்பர்சித்து
அதன் புறமும்,Athan puramum - அதற்குப் புறம்பாயுள்ள தேசமும்
விம்ம,Vimm - பூர்ணமாம்படி
வளர்ந்தவனே,Valarnthavane - த்ரிவிக்ரமனாய் வளர்ந்தவனே!
வேழமும்,Vezhamum - குவலயாபீடமென்ற யானையும்
ஏழ் விடையும்,Ezh vidaiyum - ஏழு ரிஷபங்களும்
விரவிய,Viraviya - (உன்னை ஹிம்ஸிப்பதாக) உன்னோடு வந்து கலந்த
வேலைதனுள்,Velaithanul - ஸமயத்திலே
வென்று,Vendru - (அவற்றை) ஜயித்து
வருமவனே,Varumavane - வந்தவனே!
அம்ம,Amma - ஸ்வாமியானவனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!