| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 660 | பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 3 | ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய் மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர் ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம் சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே | ஏறு அடர்த்ததும், Eru Adarththadhum - (நப்பின்னைக்காக) ஏழு ரிஷபங்களை வலியடக்கியதும் ஏனம் ஆய் நிலம் கிண்டதும், Enam Aayi Nilam Kintadhum - வராஹ ரூபியாய் பூமியைக் கோட்டாற் குத்தி யெடுத்ததும் முன் இராமன் ஆய், Mun Iraman Aayi - முன்பு சக்ரவர்த்தி திருமகனாய்ப் பிறந்து மாறு அடர்த்ததும், Maru Adarththadhum - சத்ரு ராக்ஷஸர்களைக் கிழங்கெடுத்ததும் மண் அளந்ததும், Man Alandhadum - (த்ரிவிக்ரமனாய்) உலகளந்ததும் (ஆகிய இந்த சரிதங்களை) சொல்லி பாடி, Solli Paadi - வாயாற் சொல்லி வாய் விட்டுப் பாடி வண் பேர் பொன்னி ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு, Van Peer Ponni Aaru Pol Varum Kanna Neer Kondu - ஔதார்யத்தையும் பெருமையை யுடைய அரங்கன் கோயில் திரு முற்றம், Arangan Koyil Thiru Muttram - நம் பெருமாள் ஸந்நதி உள் திரு முற்றத்தை சேறு செய் தொண்டர், Seru Sei Thondar - சேறாக்குகிற பாகவதர்களின் சே அடி செழு சேறு, Sae Adi Sezhu Seru - திருவடிகளால் துகை யுண்ட அழகிய சேற்றை என் சென்னிக்கு அணிவன், En Chennikku Anivan - என்னுடைய நெற்றிக்கு திலகமாகக் கொள்வேன் கண்ண நீர், Kanna Neer - ஆறாம் வேற்றுமை யுருபு |