திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 664 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
664பெருமாள் திருமொழி || (தேட்டரும் திறல்) - அரங்கன் அடியாரது அடிமைத்திறத்தில் ஈடுபடுதல் 7
கார் இனம் புரை மேனி நல் கதிர் முத்த வெண்ணகை செய்ய வாய் ஆர மார்வன் அரங்கன் என்னும் அரும் பெரும் சுடர் ஒன்றினை சேரும் நெஞ்சினராகி சேர்ந்து கசிந்து இழிந்த கண்ண நீர்களால் வார நிற்ப்பவர் தாள் இணைக்கு ஒருவாரம் ஆகும் என் நெஞ்சமே
பதவுரை Show / Hide
கார் இனம் புரை, Kaar Inam Purai - மேகங்களின் திரளை ஒத்த
மேனி, Meeni - திருமேனியையும்
நல் கதிர், Nal Kadhir - அழகிய லாவண்யத்தையும்
முத்தம் வெண் நகை செய்ய வாய், Muththam Ven Nagai Seyya Vaai - முத்துக்கள் போல் வெளுத்த புன் சிரிப்பை யுடைய சிவந்த திருப் பவளத்தையும்
ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரமணிந்த மார்வையுமுடையனான
அரங்கன் என்னும், Arangan Ennum - ஸ்ரீரங்கநாதனாகிற
அரும் பெரும் சுடர் ஒன்றினை, Arum Perum Sudar Ondrinai - அருமை பெருமை யுள்ள விலக்ஷணமான தொரு தேஜஸ்ஸை
சேரும் நெஞ்சினர் ஆகி, Serum Nenjinir Aagi - கிட்டி அநுபவிக்க வேணுமென்கிற சிந்தையை யுடையவராய்
சேர்ந்து, Serndhu - (அங்ஙனமே) சேர்ந்து
கசிந்து இழிந்த, Kasinthu Izhindha - (பக்தி பாரவச்யத்தாலே) சுரந்து பெருகின
கண் நீர்கள், Kan Neergal - ஆநந்த பாஷ்பங்கள்
வார நிற்பவர், Vaara Nirpavar - வெள்ளமிட்டொழுகும்படி நிற்குமவர்களுடைய
தாள் இணைக்கு, Thaal Innaikku - இரண்டு திருவடிகள் விஷயத்தில்
என் நெஞ்சம், En Nenjam - என் மனமானது
ஒரு வாரம் ஆகும், Oru Vaaram Aakum - ஒப்பற்ற அன்பையுடையதாகும்.