திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 668 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
668பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 1
மெய்யில் வாழ்க்கையை மெய் என கொள்ளும் இவ் வையம் தன்னோடும் கூடுவது இல்லை யான் ஐயனே அரங்கா என்று அழைக்கின்றேன் மையல் கொண்டு ஒழிந்தேன் என் தன் மாலுக்கே
பதவுரை Show / Hide
மெய்யில் வாழ்க்கையை, Meiyil Vaalkkaiyai - ப்ரக்ருதி ப்ராக்ருதங்களோடு பொருந்தி வாழ்வதையே
மெய் என கொள்ளும், Mei En Kollum - பாரமார்த்திகமாகக் கருதுகின்ற
இவ் வையம் தன்னோடும், Iv Vaiyam Thannodum - இவ்வுலகத்தாரோடு
யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - (இனி) நான் சேர்வதில்லை
ஐயனே, Aiyane - ‘ஸ்வாமீ’
அரங்கா, Arangaa - ‘ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) அழையா நின்றேன்;
என் தன் மாலுக்கே, En Than Maalukke - என்னிடத்தில் வாத்ஸல்யமுடைய எம்பெருமான் பக்கலிலேயே
மையல் கொண்டொழிந்தேன், Maiyal Kondonzhindhen - வ்யாமோஹடைந்திட்டேன்.