Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 67 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
67ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 4
வானவர்தாம்மகிழவன்சகடமுருள
வஞ்சமுலைப்பேயின் நஞ்சமதுஉண்டவனே.
கானகவல்விளவின்காயுதிரக்கருதிக்
கன்றதுகொண்டெறியும்கருநிறஎன்கன்றே.
தேனுகனும்முரனும்திண்திறல்வெந்நரகன்
என்பவர்தாம்மடியச்செருவதிரச்செல்லும்
ஆனை. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே–1-5-4
வானவர் தாம்,Vaanavar thaam - தேவர்கள்
மகிழ,Magizha - மகிழும்படியாகவும்
வல் சகடம்,Val sakadam - வலியுள்ள சகடாஸுரன்
உருள,Urula - உருண்டு உருமாய்ந்து போம்படியாகவும்
வஞ்சம்,Vancham - வஞ்சனையை உடையளான
பேயின்,Peyin - பூதனையினுடைய
முலை,Mulai - முலை மேல் தடவிக் கிடந்த
நஞ்சு,Nanj - விஷத்தை
அமுது உண்டவனே,Amudhu undavane - அம்ருதத்தை அமுது செய்யுமா போலே அமுது செய் தருளினவனே!
கானகம்,Kaanagam - காட்டிலுள்ளதான
வல்,Val - வலிமை பொருந்திய
விளவின்,Vilavin - விளாமரத்தினுடைய
காய்,Kaai - காய்களானவை
உதிர,Udhira - உதிரும்படி
கருதி,Karuthi - திருவுள்ளத்திற் கொண்டு
கன்று அது கொண்டு,Kanru adhu kondu - கன்றான அந்த வத்ஸாஸுரனைக் கையில் கொண்டு
எறியும்,Eriyum - (விளவின் மேல்) எறிந்தவனாய்
கரு நிறம்,Karu niram - கறுத்த நிறத்தை யுடையனாய்
என் கன்றே,En kanrae - என்னுடைய கன்றானவனே!
தேனுகனும்,Thenukanum - தேனுகாஸுரனும்
முரனும்,Muranum - முராஸுரனும்
திண் திறல்,Thin thiral - திண்ணிய வலிவை யுடையனாய்
வெம்,Vem - கொடுமை யுடையனான
நரகன்,Naragan - நரகாஸுரனும்
என்பவர் தாம்,Enbavar thaam - என்றிப்படி சொல்லப்படுகிற தீப்பப் பூண்டுகளடங்கலும்
மடிய,Madiya - மாளும்படியாக
செரு,Seru - யுத்தத்திலே
அதிர,Athira - மிடுக்கை உடையயனாய்க் கொண்டு
செல்லும்,Sellum - எழுந்தருளுமவனான
ஆனை,Aanai - ஆனை போன்ற கண்ணனே!
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!