திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 670 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
670பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 3
மாரனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினாரோடும் கூடுவதில்லை யான் ஆர மார்வன் அரங்கன் அனந்தன் நல் நாரணன் நர காந்தகன் பித்தனே
பதவுரை Show / Hide
மாரனார், Maranar - மன்மதனுடைய
வரி வெம் சிலைக்கு, Vari Vem Silaiyku - அழகிய கொடிய வில்லுக்கு
ஆள் செய்யும், Aal Seyyum - ஆட் பட்டு (விஷய ப்ரவணராய்த்) திரிகிற
பாரினாரொடும், Paarinaarodum - (இப்) பூமியிலுள்ள ப்ராக்ருதர்களோடு
யான் கூடுவது இல்லை, Yaan Kooduvadhu Illai - :
ஆரம் மார்வன், Aaram Maarvan - முக்தாஹாரத்தைத் திரு மார்பிலே அணிந்துள்ளவனாய்
அனந்தன், Ananthan - அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையவனாய்
நல் நாரணன், Nal Naranan - ஸர்வ ஸ்வாமியாய்
நரக அந்தகன், Naraga Andhagan - அடியவர்களை நரகத்தில் சேராதபடி காத்தருள்பவனான
நரகாந்தகன், Naragandhagan - நரகாஸூரனைக் கொன்றவன் என்றுமாம்.
அரங்கன், Arangan - ஸ்ரீரங்கநாதன் விஷயத்திலே
பித்தன், Piththan - மோஹமுடையனாயிரா நின்றேன்.