திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 675 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
675பெருமாள் திருமொழி || (மெய்யில் வாழ்க்கையை) - அழகிய மணவாளன்பால் மயல் விஞ்சிய நிலையில் எழுந்த மாற்றம். 8
பேயரே எனக்கு யாவரும் யானுமோர் பேயனே எவர்க்கும் இது பேசி என்? ஆயனே அரங்கா என்று அழைகின்றேன் பேயனாய் ஒழிந்தேன் எம் பிரானுக்கே
பதவுரை Show / Hide
யாவரும், Yavarum - இவ் வுலகத்தாரடங்கலும்
எனக்கு, Enakku - என் வரைக்கும்
பேயரே, Peyare - பைத்தியக்காரர்கள் தான்;
யானும், Yaanum - (அவர்களிற் காட்டில் விலக்ஷணனான) நானும்
எவர்க்கும், Everkum - எவர்களுக்கும்
ஓர் பேயனே, Or Peyane - ஒரு பைத்தியக்காரன் தான்;
இது, Idhu - இவ் விஷயத்தை
பேசி, Peshi - (விரிவாகச்) சொல்வதனால்
என், En - என்ன ப்ரயோஜநமுண்டு?
ஆயனே, Aayane - ‘ஸ்ரீகிருஷ்ணனே!
அரங்கா, Arangaa - ஸ்ரீரங்கநாதனே!’
என்று அழைக்கின்றேன், Endru Azhaiykinren - என்று (பகவந் நாமங்களைச் சொல்லி) கூவா நின்றேன்;
எம்பிரானுக்கே பேயனாய் ஒழிந்தேன், Em Piranukke Peyanai Ozhindhen - .
என்ற பழமொழியின்படி, Endra Pazhamozhiyinbadi - லோகவிஜாதீயரான நீர் பைத்தியக்காரன்; என்று எல்லாராலும் இகழக் கூடியவராயிருக்கின்றீரே!