| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 677 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 1 | ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன் ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல் கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே | ஆன் ஏறு ஏழ் வென்றான், Aan Eru Ezhu Vendran - நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு அடிமை திறம் அல்லால், Adimai Thiram Allaal - கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல் ஊன் ஏறு செல்வத்து உடல் பிறவி, Oon Eru Selvaththu Udal Piravi - நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தை யுடைய இம் மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை யான் வேண்டேன், Yaan Vaendein - (விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்ப மாட்டேன்; (அன்றியும்,) கூன் ஏறு சங்கம், Koon Eru Sangam - வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை இடத்தான் தன், Idaththaan Than - இடத் திருக் கையிலே யுடையனான எம்பெருமானுடைய வேங்கடத்து, Vengadaththu - திருவேங்கட மலையில் கோனேரி வாழும், Konerii Vaalum - திருக் கோனேரி என்கிற ஸ்வாமி புஷ்கரிணியில் வாழ்கிற குருகு ஆய் பிறப்பேன், Kurugu Aay Pirappen - நாரை யாகவாவது பிறக்கக் கடவேன். அடிமைத் திறமாவது, Adimai Thiramavathu - திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் கோன் ஏரி, Kon Aeri - ஸ்வாமி புஷ்கரிணி. ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன், Oon Aan Kon Enbavatril N - சாரியை, குருகு என்ற சொல், Kurugu Endra Sol - அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர் வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும். |