Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

வெளியீட்டு குறிப்புகள் (Release Notes)
Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை

Search Results for: 68 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
68ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 5
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார்
வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு
ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை
ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய்.
முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன்
முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய
அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை
ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுக–1-5-5
வார் குழல்,Vaar kuzhal - நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார்,Nal madavaar - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே
வைத்தன,Vaiththana - சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து,Mathu - மத்தாலே
அளவும்,Alavum - அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்,Thayirum - தயிரையும்
நெய்,Ney - நெய்யையும்
களவால்,Kalavaal - திருட்டு வழியாலே
வாரி,Vaari - கைகளால் அள்ளி
விழுங்கி,Vizhungi - வயிறார உண்டு
உன்னிய,Unniya - உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய்
ஒருங்கு,Orungu - ஒருபடிப்பட
ஒத்த,Otha - மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்,Inai marutham - இரட்டை மருதமரமாய்க் கொண்டு
வந்தவரை,Vanthavarai - வந்துநின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்,Ooru karathinodum - துடைகளாலும் கைகளாலும்
உந்திய,Unthiya - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்,Vem thiravoi - வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த,Atha - அப்பனே!
முத்து,Muthu - திருமுத்துக்கள் தோன்றும்படி
இன்,In - இனிதான
இள முறுவல்,Ila muruval - மந்தஹாஸமானது
முற்ற,Mutra - பூர்ணமாக
வருவதன் முன்,Varuvathan mun - வெளிவருவதற்கு முன்னே
முன்னம் முகத்து,Munnam mugaththu - முன் முகத்திலே
அணி ஆர்,Ani aar - அழகு மிகப் பெற்று
மொய்,Moi - நெருங்கி யிரா நின்ற
குழல்கள்,Kuzhalgal - திருக் குழல்களானவை
அலைய,Alaiya - தாழ்ந்து அசையும்படி
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!