திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 68 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
68பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 5
மத்தளவும்தயிரும்வார்குழல்நன்மடவார் வைத்தனநெய்களவால்வாரிவிழுங்கி ஒருங்கு ஒத்தஇணைமருதம்உன்னியவந்தவரை ஊருகரத்தினொடும்உந்தியவெந்திறலோய். முத்தினிளமுறுவல்முற்றவருவதன்முன் முன்னமுகத்தணியார்மொய்குழல்களலைய அத்த. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுக–1-5-5
பதவுரை Show / Hide
வார் குழல்,Vaar kuzhal - நீண்ட மயிர்முடியை யுடையராய்
நல் மடவார்,Nal madavaar - நன்மையையும் மடப்பத்தையுமுடையரான ஸ்த்முகனாலே
வைத்தன,Vaiththana - சேமித்து வைக்கப்பட்டவையாய்
மத்து,Mathu - மத்தாலே
அளவும்,Alavum - அளாவிக் கடைகைக்கு உரிய
தயிரும்,Thayirum - தயிரையும்
நெய்,Ney - நெய்யையும்
களவால்,Kalavaal - திருட்டு வழியாலே
வாரி,Vaari - கைகளால் அள்ளி
விழுங்கி,Vizhungi - வயிறார உண்டு
உன்னிய,Unniya - உன்னை நலிய வேணும் என்னும் நினைவையுடையராய்
ஒருங்கு,Orungu - ஒருபடிப்பட
ஒத்த,Otha - மனம் ஒத்தவர்களாய்
இணை மருதம்,Inai marutham - இரட்டை மருதமரமாய்க் கொண்டு
வந்தவரை,Vanthavarai - வந்துநின்ற அஸுரர்களை
ஊரு கரத்தினொடும்,Ooru karathinodum - துடைகளாலும் கைகளாலும்
உந்திய,Unthiya - இரண்டு பக்கத்திலும் சரிந்து விழும்படி தள்ளின
வெம்திறவோய்,Vem thiravoi - வெவ்விய வலிவை யுடையவனே!
அத்த,Atha - அப்பனே!
முத்து,Muthu - திருமுத்துக்கள் தோன்றும்படி
இன்,In - இனிதான
இள முறுவல்,Ila muruval - மந்தஹாஸமானது
முற்ற,Mutra - பூர்ணமாக
வருவதன் முன்,Varuvathan mun - வெளிவருவதற்கு முன்னே
முன்னம் முகத்து,Munnam mugaththu - முன் முகத்திலே
அணி ஆர்,Ani aar - அழகு மிகப் பெற்று
மொய்,Moi - நெருங்கி யிரா நின்ற
குழல்கள்,Kuzhalgal - திருக் குழல்களானவை
அலைய,Alaiya - தாழ்ந்து அசையும்படி
எனக்கு,Enakku - எனக்காக
ஒரு கால்,Oru kaal - ஒரு விசை
செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்;
ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய்
போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே!
ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!!