Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 684 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
684பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 8
பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும்
முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான்
வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல்
நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே
பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும்
பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும்
இந்திரனும், Indiranum - தேவேந்திரனும்
முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற
பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக
குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும்
மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய
வெறி ஆர் தண்சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய
நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற
நிலை, Nilai - நிலையை
உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன்.