| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 684 | பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 8 | பிறையேறு சடையானும் பிரமனு மிந்திரனும் முறையாய பெருவேள்விக் குறைமுடிப்பான் மறையானான் வெறியார்தண் சோலைத் திருவேங் கடமலைமேல் நெறியாய்க் கிடக்கும் நிலையுடையே னாவேனே | பிறை ஏறு சடையானும், Pirai Eru Sadayanum - இளஞ் சந்திரன் ஏறியிரா நின்ற ஜடையையுடைய சிவனும் பிரமனும், Brahmanum - ப்ரஹ்மாவும் இந்திரனும், Indiranum - தேவேந்திரனும் முறை ஆய, Murai Aaya - தம் தமது யோக்யதைக்குத் தக்கபடி செய்கின்ற பெரு வேள்வி, Peru Velvi - பெரிய பாகங்களின் பயனாக குறை முடிப்பான், Kurai Mudippaan - (அவர்களது) குறையைத் தீர்த்து அவர்கள் கோரிக்கையைத் தலைகட்டுவிப்பனும் மறை ஆனான், Marai Aanaan - வேதங்களிற் பரம்பொருளாகக் கூறப்படுபவனுமான எம்பெருமானுடைய வெறி ஆர் தண்சோலை, Veri Aar Than Solai - பரிமளம் மிக்க குளிர்ந்த சோலைகளையுடைய நெறி ஆய் கிடக்கும், Neri Aay Kidakkum - (போகிற) வழியாய்க் கிடக்கின்ற நிலை, Nilai - நிலையை உடையேன் ஆவேன், Udaiyen Aaven - உடையவனாகக் கடவேன். |