Header Image

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் ஸ்வாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகை

Search Tips: Enter Pasuram,padham/word in tamil or english, pasuram number.
eg. திருமாலை,மணிவண்ணா,thiruppavai,pallandu,பறை,vamanan,சென்னியோங்கு, 2-8-2, 940 etc.
See Release notes for more details

தனியன்கள் | நித்யாநுஸந்தானம் | சாற்றுமுறை | திவ்யப்ரபந்தம்-எண்ணிக்கை | நாலாயிர திவ்யப்ரபந்தப் பாசுரங்களின் அடைவு | திவ்யதேசம் -ஆழ்வார் -பாசுர எண்ணிக்கை அட்டவணை

Search Results for: 685 (1 results)

Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
685பெருமாள் திருமொழி || (ஊனேறு) - திருவேங்கட மலைத் தொடர்பு வேண்டல் 9
செடியாய வல் வினைகள் தீர்க்கும் திரு மாலே!
நெடியானே! வேம்கடவா! நின் கோயிலின் வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தது இயங்கும்
படியாய் கிடந்தது உன் பவள வாய் காண்பேன
செடி ஆய, Sedi Aay - செடி போல் அடர்ந்துள்ள
வல் வினைகள், Val Vinaigal - கொடிய கருமங்களை
தீர்க்கும், Theerkum - (ஆச்ரிதர்க்குப்) போக்கி யருள்கிற
திருமாலே, Thirumaale - ஸ்ரீய:பதியான பெருமானே!
நெடியானே, Nediyane - பெரியோனே!
வேங்கடவா, Vengadavaa - திருவேங்கட முடையானே!
நின் கோயிலின் வாசல், Nin Koyilin Vaasal - உனது ஸந்நிதியின் உள் வாசலிலே
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்படி ஆய் கிடந்து, Adiyaarum Vaanavarum Arampaiyarum Kidandhu Iyankumpadi Aay Kidandhu - பாகவதர்களும் மற்றைத் தேவர்களும்
உன் பவளம் வாய் காண்பேன், Un Pavalam Vaai Kaanbaen - உனது பவழம் போன்ற திருவதரத்தைக் காண்பேனாகக் கடவேன்.