| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 69 | ஸ்ரீ பெரியாழ்வார் திருமொழி || (முதல் பத்து-ஐந்தாம் திருமொழி - உய்யவுலகு) (தலையைநிமிர்த்து முகத்தை அசைத்து ஆடுதல், செங்கீரைப்பருவம்) 6 | காயமலர்நிறவா. கருமுகில்போலுருவா. கானகமாமடுவில்காளியனுச்சியிலே தூயநடம்பயிலும்சுந்தரஎன்சிறுவா. துங்கமதக்கரியின்கொம்புபறித்தவனே. ஆயமறிந்துபொருவான்எதிர்வந்தமல்லை அந்தரமின்றியழித்தாடியதாளிணையாய். ஆய. எனக்குஒருகால்ஆடுகசெங்கீரை ஆயர்கள்போரேறே. ஆடுகஆடுகவே.–1-5-6 | காய மலர்,Kaaya malar - காயாம் பூப் போன்ற நிறவா,Niravaa - நிறத்தை யுடையவனே! கரு முகில் போல்,Karu mugil pol - காள மேகம் போன்ற உருவா,Uruvaa - ரூபத்தை யுடையவனே கானகம்,Kaanagam - காட்டில் மா மடுவில்,Maa maduvil - பெரிய மடுவினுள்ளே கிடந்த காளியன்,Kaaliyan - காளிய நாகத்தினுடைய உச்சியிலே,Uchiyile - தலையின் மீது தூய,Thooya - மனோஹரமான நடம்,Nadam - நர்த்தநத்தை பயிலும்,Pailum - செய்தருளின சுந்தர,Sundara - அழகையுடையவனே! என் சிறுவா,En siruvaa - எனக்குப் பிள்ளை யானவனே! துங்கம்,Thungam - உன்னதமாய் மதம்,Madham - மதத்தை யுடைத்தான கரியின்,Kariyin - குவலயாபீடமென்னும் யானையினது கொம்பு,Kombu - தந்தங்களை பறித்தவனே,Pariththavane - முறித்தருளினவனே! ஆயம் அறிந்து,Aayam arindhu - (மல்ல யுத்தம்) செய்யும் வகையறிந்து பொருவான்,Poruvaan - யுத்தம் செய்வதற்காக எதிர் வந்த,Ethir vantha - எதிர்த்து வந்த மல்லை,Mallai - மல்லர்களை அந்தரம் இன்றி,Antharam indri - (உனக்கு) ஒரு அபாயமுமில்லாதபடி அழித்து,Azhiththu - த்வம்ஸம்செய்து ஆடிய,Aadiya - (இன்னம் வருவாருண்டோ என்று) கம்பீரமாய் ஸஞ்சரித்த தான் இணையாய்,Thaan inaiyaai - திருவடிகளை யுடையவனே! ஆய,Aaya - ஆயனே! எனக்கு,Enakku - எனக்காக ஒரு கால்,Oru kaal - ஒரு விசை செங்கீரை ஆடுக,Sengkirei aaduga - செங்கீரை யாடி யருள வேணும்; ஆயர்கள்,Aayargal - இடையர்களுக்கு விதேயனாய் போர் ஏறே,Por aerae - போர்செய்ய நின்ற ரிஷபம் போலே செருக்கி யிரா நின்ற கண்ணனே! ஆடுக ! ஆடுக!!,Aaduga aaduga - ஆடுக ! ஆடுக!! |