திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 690 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
690பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 3
மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என் பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன் தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே
பதவுரை Show / Hide
மீன் நோக்கும், Meen Nokkum - மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று)
நீள் வழல் சூழ், Neel Vazhalsuzh - விசாலமான கழனிகள் சூழ்ந்த
வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள
அம்மா, Amma - பெருமானே!
என் பால், En Paal - அடியேன் மீது
நோக்காய் ஆகிலும், Nokkaai Aagilum - நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும்
உன் பற்று அல்லால் பற்று இலேன், Un Patru Allal Patru Ileen - உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்;
தார் வேந்தன், Thaar Vendan - (குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன்
தான் நோக்காது, Thaan Nokkadhu - (அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல்
எத் துயரம் செய்திடினும், Eth Thuyaram Seithidinum - எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும்
கோல் நோக்கி வாழும், Kool Nokki Vaalum - அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற
குடி போன்று இருந்தேன், Kudi Ponder Irundhen - ஒத்திருக்கின்றேன்