| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 690 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 3 | மீன் நோக்கும் நீள் வயல் சூழ் வித்துவ கோட்டு அம்மா ! என் பால் நோக்காய் ஆகிலும் உன் பற்று அல்லால் பற்றி இலேன் தான் நோக்காது எத் துயரம் செய்திடினும் தார் வேந்தன் கோல் நோக்கி வாழும் குடி போன்று இருந்தேனே | மீன் நோக்கும், Meen Nokkum - மீன்களெல்லாம் (தாம் வஸிப்பதற்கு மிகவும் தகுதியான இடமென்று) நீள் வழல் சூழ், Neel Vazhalsuzh - விசாலமான கழனிகள் சூழ்ந்த வித்துவக்கோடு, Viththu Vakkodu - திருவித்துவக் கோட்டில் எழுந்தருளியுள்ள அம்மா, Amma - பெருமானே! என் பால், En Paal - அடியேன் மீது நோக்காய் ஆகிலும், Nokkaai Aagilum - நீ அருள் நோக்கம் செய்யாதிருந்தாலும் உன் பற்று அல்லால் பற்று இலேன், Un Patru Allal Patru Ileen - உன்னைச் சரணமாகப் பற்றுதலை விட்டு வேறொருவரைச் சரணம் புக மாட்டேன்; தார் வேந்தன், Thaar Vendan - (குடிகளைக் காப்பதற்கென்று) மாலை யணிந்துள்ள அரசன் தான் நோக்காது, Thaan Nokkadhu - (அதற்கு ஏற்றபடி) தான் கவனித்துப் பாதுகாவாமல் எத் துயரம் செய்திடினும், Eth Thuyaram Seithidinum - எப்படிப்பட்ட துன்பங்களைச் செய்தாலும் கோல் நோக்கி வாழும், Kool Nokki Vaalum - அவனுடைய செங்கோலையே எதிர் பார்த்து வாழ்கிற குடி போன்று இருந்தேன், Kudi Ponder Irundhen - ஒத்திருக்கின்றேன் |