திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 691 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
691பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 4
வாளால் அறுத்து சுடினும் மருத்துவன் பல் மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால் மீளா துயர் தரினும் வித்துவ கோட்டு அம்மா ! நீ ஆளா வுனதருளே பார்ப்பன் அடியேனே
பதவுரை Show / Hide
வாளால் அறுத்து, Vaalal Aruthu - (வைத்தியன்) கத்தியைக் கொண்டு அறுத்தலும், (ஊசியைக் காய்ச்சிச்)
சுடினும், Sudinum - சூடு போடுதலுஞ் செய்தாலும்
மருத்துவன் பால் மாளாத காதல், Maruthuvan Paal Maaladha Kaadhal - அவ்வைத்தியனிடத்து நீங்காத அன்புடைய
நோயாளன் போல், Noyaalan Pol - நோயாளியைப் போல
மாயத்தால், Maayathaal - (உன்) மாயையினால்
நீ மீளா துயர் தரினும், Nee Meela Thuyar Tharinum - நீ நீங்காத துன்பத்தை (எனக்கு) விளைத்தாலும்
அடியேன், Adiyen - உனது அடியவனான நான்
ஆள் ஆக, Aal Aaga - அவ்வடிமை ஸித்திப்பதற்காக
உனது அருளே பார்ப்பன், Unathu Arule Paarppan - உன்னுடைய கருணையையே நோக்கி யிரா நின்றேன்