| Pasuram Number | Prabandham | Pasuram | PadhaArtham |
|---|---|---|---|
| 693 | பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 6 | செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால் வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே | செம் தழலே வந்து, Sem Thazhale Vandu - செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து அழலை செய்திடினும், Azhalai Seithidinum - வெப்பத்தைச் செய்தாலும் செம் கமலம் அந்தரம் சேர் வெம், Sem Kamalam Andharam Ser Vem - செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய கதிரோற்கு அல்லால், Kathirorku Allal - கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது. அலரா, Alaraa - (நெருப்புக்கு) மலர மாட்டா; வெம் துயர், Vem Thuyar - அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை வீட்டா விடினும், Veetta Vidinum - தீர்த்தருளா தொழிந்தாலும் உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால், Un Andham Il Seerkku Allal - உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல் அகம் குழைய மாட்டேன், Aham Kuzhaiya Maatten - (வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன். |