திருமண் காப்பு

ஆழ்வார்கள் அருளிச்செய்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் - பதவுரை தேடல்

திவ்யார்த்த தீபிகை (ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார்) · சில தொகுப்புகளில் பெரியவாச்சான் பிள்ளை, நம்பிள்ளை, ஸ்ரீ மணவாள மாமுனிகள் அவதாரிகை

உதாரணம்: திருப்பாவை, vamanan, 940, 2-8-2, 1-1 வாடினேன் வாடி

கருத்து: feedback@nalayiram.in

and/or and/or Clear

Search Results for: 693 (1 results)

Top
Pasuram Number Prabandham Pasuram PadhaArtham
693பெருமாள் திருமொழி || (தரு துயரம் தடாயேல்) - திருவித்துவக் கோட்டம்மானையே வேண்டி நிற்றல் 6
செந் தழலே வந்து அழலை செய்திடினும் செங்கமலம் அந்தரம் சேர் வெங்கதிரோர்க்கு அல்லால் அலராவால் வெந்துயர் வீட்டா விடினும் வித்து கோட்டு அம்மா ! உன் அந்தமில் சீர்க்கு அல்லால் அகம் குழைய மாட்டேனே
பதவுரை Show / Hide
செம் தழலே வந்து, Sem Thazhale Vandu - செந்நிறமுடைய நெருப்பு (தானாக) அருகில் வந்து
அழலை செய்திடினும், Azhalai Seithidinum - வெப்பத்தைச் செய்தாலும்
செம் கமலம் அந்தரம் சேர் வெம், Sem Kamalam Andharam Ser Vem - செந்தாமரைகள் வானத்தில் தோன்றுகிற வெவ்விய
கதிரோற்கு அல்லால், Kathirorku Allal - கிரணங்களை யுடைய ஸூர்யனுக்கு மலருமே யல்லது.
அலரா, Alaraa - (நெருப்புக்கு) மலர மாட்டா;
வெம் துயர், Vem Thuyar - அநுபவித்தே தீர வேண்டியவையான கொடிய (என்) பாவங்களை
வீட்டா விடினும், Veetta Vidinum - தீர்த்தருளா தொழிந்தாலும்
உன் அந்தம் இல் சீர்க்கு அல்லால், Un Andham Il Seerkku Allal - உனது எல்லையில்லாத உத்தம குணங்களுக்கே யல்லாமல்
அகம் குழைய மாட்டேன், Aham Kuzhaiya Maatten - (வேறொன்றுக்கு நான்) நெஞ்சுருக மாட்டேன்.